சஞ்சிகை ஒன்றை ஆரம்பிப்பது என்பது எங்களின் நீண்ட நாள் யோசனை. (தனிப்பட்டதும் கூட) ஆனால் நாங்கள் பதிவுலகிலும் இருப்பதால் பதிவர்களின் ஆக்கங்களை திரட்டி சஞ்சிகையாக கொண்டுவர தற்போது யோசித்து இருக்கின்றோம்.

கொழும்பில் அரையாண்டு இதழாக வெளிவரும் இரண்டு சஞ்சிகையிலும் (பல்கலை மற்றும் சட்டக்கல்லூரி நண்பர்கள்), யாழ்ப்பாணத்தில் காலாண்டு இதழாக வெளிவரும் ஒரு சஞ்சிகையிலும் எமது சிறிய பங்களிப்பு இருப்பதால்... அதனையே அனுபவமாகக் கொண்டு நாங்களாகவே ஒரு சிற்றிதழை அடுத்துவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் உருவாக்க முயற்சிக்கின்றோம்.

எடுக்கப்படும் பதிவுகள் பற்றிய அறிவிப்பு உரியவர்களுக்கு சென்றடையும். இது பற்றிய மேலதிக விடயங்களை சக பதிவர், நண்பி கிப்பூ வலைத்தளத்தில் பார்க்கவும்.

இங்கே கிளிக்குங்கள்

பதிவுலகில் காத்திரமான படைப்புக்கள் தொடர்ச்சியாக வருவதற்கு, இந்த முயற்சி துணைபுரியும் என நம்புகின்றோம்.