பொதுவாகப் பெண்களுக்கு தங்கள் சார்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும் வாங்கவே துடிப்பார்கள். மனதுக்குப் பிடித்து விட்டால் விலையை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள். இது எனக்கு நல்ல அனுபவம்.

பெண்களில் பல ரகமானவர்கள் இருக்கின்றார்கள். சிலருக்கு நாளுக்கு நாள் உடுப்புக்கேற்றவாறு விதம் விதமான பாதணிகள் போடுவது விருப்பம். சிலர் உடுப்பின் கலருக்கு ஏற்றவாறு நகப்பூச்சுக்கள் மாற்றிக் கொள்வார்கள். அதனைவிட காப்பு, தோடு, மணி மாலைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களையும் விதம் விதமாக வாங்கிச் சேகரித்துக் கொள்வார்கள். நாளுக்கு நாள் வித்தியாசமாக தலையலங்காரம் செய்வார்கள். சாறிகளை டசின் கணக்காக எல்லா நிறங்களிலும் வாங்கி அடுக்கிக் கொள்வார்கள். இவ்வாறு ஒவ்வொரு பெண்களின் ரசனையும் அவரவர்கள் விருப்பப்படி மாறிக் கொள்ளும்.

இதனால் கஷ்டப் படப்போவது பெண்களுடன் கூடவே பயணிக்கும் தந்தை, பின் சகோதரன், பின் காதலன், பின் கணவன். அவர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான்.

நான் இங்கு குறிப்பிடுவது பெண்களின் வித்தியாசமான ஒரு ரசனை. சிறு வயது முதலே இதனையும் பெண்களையும் பிரிக்க முடியாது. இளம் பெண்களின் நடமாடும் பியூட்டி பார்ளல் அதற்குள் தான் உண்டு. அது தான் கைப்பைகள் (HAND BAGS).










இது பெண்களின் முக்கிய குறியீட்டுப் பொருளாகின்றது. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பொருட்களையும் போலவே சில பெண்கள் விதம் விதமாக இந்த கைப்பைகளைச் சேகரித்துக் கொள்வார்கள்.

மேலே உள்ள படங்களில் காணப்படும் கைப்பைகள் வித்தியாசமான மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இவை பலவர்ணங்களில் கவர்ச்சிகரமாக காணப்படுவதால் பெண்களை இலகுவாக கவர்ந்து விடுகின்றது. இன்று ஒரு நல்ல கைப்பையை வாங்க வேண்டுமெனில் குறைந்தது 500 ரூபாவிற்கு மேல் தேவை. அந்தளவு பணத்தை செலவழித்து வாங்காவிட்டால் கைப்பை எங்களிடம் ஒட்டாது என பலர் நினைத்துக் கொள்வது. முடிவு விற்பனையாளன் வருமானம் எகிறும்.