தேவையான பொருட்கள்
- சீரகச்சம்பா அரிசி - 1 கப்
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- மிளகு - சிறிதளவு
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மிளகு, சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
- இஞ்சி - 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
- நெய் - 4 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - 4 கப்
- உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
- ரைஸ் குக்கரில் 2 கப் தண்ணீரை ஊற்றி ON பண்ணவும்.
- பிறிதான அடுப்பில் தாச்சியை வைத்து பாசிப்பருப்பை மிதமான சூட்டில் வாசனை வரும்வரை வறுத்து குக்கரில் கொதிக்கும் தண்ணீரில் போடவும்.
- அதே தாச்சியில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- அதனுடன் இஞ்சி, மிளகு, சீரகம், சேர்த்து நெய்யில் நன்கு பொரித்து எடுத்து குக்கரில் கொதிக்கும் பாசிப்பயறுடன் சேர்த்து கிளறவும்.
- சீரகச் சம்பா அரிசியை நன்கு களைந்து 2 கப் தண்ணீருடன் குக்கரில் சேர்க்கவும்.
- கருவேப்பிலை, உப்பு, மிளகு, சீரகம் என்பவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
- நமக்கு ஐந்து நிமிட வேலை தான். மீதியை றைஸ் குக்கர் பார்த்துக் கொள்ளும்.
- Keep warm mode வந்தவுடன் குக்கரை OFF செய்து பொங்கலை வேறாக்கி ஆறவிட்டு பரிமாறவும்.
- நீங்களும் முயற்சி செய்து பார்த்து ருசியைப் பகிருங்கள்.
பி.கு : றைஸ் குக்கர் இல்லாதவன் என்ன செய்யுறது எண்டு அதிக பிரசங்கித் தனமா கேட்கக் கூடாது.
0 comments:
Post a Comment