நான் ஒரு நாள் பத்திரிக்கை ஸ்தாபனத்திற்கு போனேன் எவ்வளவு அனுபவங்கள் .நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .செய்தி ஆசிரியர் எனக்கு ஒரு ஆங்கில செய்தியை மொழிபெயர்க்க தந்தார் நானும் வாங்கிக்கொண்டு எனக்கான இருக்கையில் அமர்ந்துகொண்டு என் வேலையை ஆரம்பித்தேன் .அதற்கு முதல் சுற்றி எல்லோரையும் ஒரே பார்வையில் பார்த்துமுடித்தேன் .என்னை பார்ப்பார் யாரும் இல்லை .பிறகு என்ன வழமையான வேலை தான் .அன்று ஒரு வேலை புறக்கணிப்பு வைத்தியர்களால் நடத்தப்பட்டது .அதற்கான போட்டோவை எடுப்பதற்கு செய்தி ஆசிரியர் ஒருவரை அனுப்பினார் .அவரும் அந்த வைத்தியசாலைக்கு போய்விட்டார் .ஒரு மணித்தியாலம் கழித்து தொலைபேசி வந்தது ,அதை நான் எடுத்து ஹலோ சொல்ல ,போனவர்தான் பேசினார் .நான் உடனே ஆசிரியரிடம் கொடுத்தேன் .ஹலோ சொல்ல முதலே ''உனக்கு நான் என்ன சொல்லி அனுப்பினான் நீ என்ன வாய் பார்க்கிறியா ?''என்று பேசினார் .எங்களுக்கு என்ன நடந்தது என்று விளங்கவில்லை .போனவர் கேட்டாராம் என்ன ஆர்ப்பாட்டத்தைக் காணவில்லை என்று ?நான் என்ன செய்வது என்று கேட்க ஆசிரியர் சொன்னார் நீ சாப்பிட்டு மரத்துக்