மலர்ந்திருக்கும் விகுர்தி சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


இம்முறை வடக்கு - தெற்கு இணைப்பின் பின் புது வருடம். நண்பர்கள் பலர் யாழ்பாணம் சென்று விட்டார்கள். எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, அங்கு புது வருடம் களை கட்டுவதாக கேள்வி. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிழமை முழுவதும் அனைத்து கடைகளையும் திறக்குமாறு யாழ்ப்பாண வணிகர் கழகம் கடை உரிமையாளர்களிடன் கோரிக்கை விடுத்தது. தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பொருட்கள் கொள்வனவில் மக்கள் அதிகளவில் ஈடுபட்டார்கள். கொழும்பில் சாப்பிடுவதற்கு கூட கடைகள் திறக்கவில்லை. காலையில் வங்கி நடவடிக்கைகள் மும்மரமாக இருந்தது.

தமிழரின் புத்தாண்டு பற்றிய குழப்பம் பொதுவாக உண்டு. அதனை உருவாக்கிய செல்வ சீமான் பற்றிய ஒரு கேலிச்சித்திரம்.