1977இற்குப் பின்னர் முதற்தடவையாக 2009இல் நடைமுறைக்கணக்கு மிகையொன்றினைப் பதிவு செய்யவிருக்கின்றது.



ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 2.8சதவீதத்தால் அதிகரித்த போதிலும் 2009 நவம்பர் இறுதியளவில் பதிவு செய்யப்பட்ட ஏறத்தாழ 4 சதவீதமான ஆண்டுச் சராசரிப் பண வீக்கத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு பண வீக்க அழுத்தங்கள் தொடர்ந்தும் மடடுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.பண வீக்கத் தோற்றப்பாடு தொடர்ந்தும் சாதகமானதாகவுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்து வரும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய அபிவிருத்தி நாட்டின் ஏனைய பகுதிகளுடன் அவை ஒருங்கிணைவதனை அதிகரித்து நாட்டில் பொருட்கள் மற்றும் பணிகளின் நிரம்பலை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.உள்நாட்டுப் பொருளாதாரத்தில் இடம் பெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற சாதகமான நிரம்பல் பக்க அபிவிருத்திகள் பண வீக்கத்தில் சாதகமான தாக்கத்தினை முன்னெடுத்துச் செல்லும்.
ஏற்றுமதி வருவாய்களிலான வீழ்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து இறக்குமதிச் செலவீனங்களிலான உயர்ந்த வீழ்ச்சி 2009இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையினைக் கணிசமான அளவிற்கு சுருக்கமடையச் செய்வதற்கு வழிவகுத்தது.


வர்த்தக மற்றும் வருவாய் கணக்குகளின் திரண்ட பற்றாக்குறைகள் நடைமுறை மாற்றங்கள் மற்றும் பணிகள் கணக்குகளிற்கான உயர்ந்த உட்பாய்ச்சல்களினால் ஈடுசெய்யப்பட்டு 2009 இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் நடைமுறைக் கணக்கு 393 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மிகையொன்றினைப் பதிவு செய்வதற்கு வழிவகுத்தது. இந்தச் செயலாற்றுகை நான்காம் காலாண்டிலும் தொடரும் எனவும் 1977இற்குப் பின்னர் முதற்தடவையாக 2009 இல் நடைமுறைக்கணக்கு மிகையொன்றினைப் பதிவு செய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது நிலவுகின்ற மிகவும் சாதகமான முதலீட்டுச் சூழ்நிலை உலகப் பொருளாதாரத்தில் படிப்படியான மீட்சி மற்றும் மத்திய வங்கியின் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைமை என்பனவற்றின் உதவியுடன் உள்நாட்டு பொருளாதாரச் செயற்பாட்டிற்கான வாய்புக்கள் மேம்பாடடைந்துள்ளன.எனவே சந்தை வட்டி வீதங்களிலான வீழ்ச்சி மற்றும் நிதியியல் சந்தைகளின் மிகவும் ஸ்திரமான நிலைப்பாடுகள் போன்றவற்றிலான மிகவும் சாதகமான கொடுகடன் நிலைப்பாடுகள் என்பனவற்றின் காரணமாக கொடுகடன் பாய்ச்சல் படிப்படியாக உயர்வடையுமென எதிர்பாக்கப்படுகின்றது.நாட்டின் வெளிநாட்டுச் சொத்துக்களிலான அதிகரிப்பு மற்றும் தொடர்ந்துவரும் காலப்பகுதியில் தனியார் துறைக்கான கொடுகடன் பாய்ச்சல்களின் சாத்தியமான உயர்வு போன்றவற்றினால் விரிந்த பண நிரம்பல் மேலும் விரிவடைவதற்கான சாத்தியமுள்ள போதிலும் இவ்வாண்டிற்கானதும் அடுத்த ஆண்டிற்கானதுமான நாணய இலக்குகளினைக் குறித்துரைக்கும் போது இந்த விரிவாக்கம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.



அபிவிருத்திகளை கருத்திற் கொண்டு நாணயச்சபை 2009 டிசம்பர் 11ம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் தொடர்ந்தும் பேணிக் கொள்வதற்கு முடிவு செய்துள்ளது.இதன் படி மீள் கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள் கொள்வனவு வீதம் முறையே 7.50சத வீதமாகவும் 9.75சத வீதமாகவும் இருக்கும்.


நாணயக் கொள்கை மீதான அடுத்த அறிக்கை 2010 ஜனவரி 19ம் திகதி வெளியிடப்படும்.

ஒருநாள் மாலை நேரமிருக்கும் நான் ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது அவர்கள் டி வி தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். பார்த்தேன் டி வியில் மெகா சீரியல் சீரியஸ்ஸாக போய்க்கொண்டிருந்தது. ஒரு நிமிடத்துக்குள் எனக்குத் தேனீர் தந்து விட்டு மீண்டும் உட்கார்ந்து விட்டார்கள். அப்பொழுது அவர்களுடைய மகள் ரியூசனுக்குச் சென்றிருந்தார். நான் வெளிக்கிட்ட போது அவளும் வந்தாள். வரும்போதே “அம்மா இண்டைக்கு கோலங்கள்ல என்னம்மா நடந்தது? ஆதியைப் பொலிஸ் பிடிச்சிட்டுதா?” “வாத்தி இண்டைக்கு வேளைக்கு விடும் எண்டு பார்த்தன், அது இண்டைக்குத் தான் ஏதோ அமளியாப் படிப்பிக்குது. சீ… இண்டைக்கு கோலங்கள் மிஸ் பண்ண்pயாச்சு, இனி பின்னேரம் அந்த வாத்தி கிளாஸ் வைச்சாப் போறேல” என்றாள். அவள் ஒன்பதாம் ஆண்டுதான் படிக்கிறாள் என்பது எனக்கு மேலும் சிரிப்பை வரவழைத்தது. அந்தக் கணம் உணர்ந்தேன் இந்த நாடகங்கள் எவ்வளவு போதை ஊட்டுபனவாக இருக்கின்றதே என்று கஞ்சா , ஹெரோயினை விட மேசமானவை.


நாடகங்கள் திரைப்படங்கள் தயாரித்து வெளியிடுவதன் நோக்கம் சமூக சீர்கேடுகளை குறைப்பதும் சமூகத்தை நல்வழிப்படுத்த தீயவற்றைக்கழைவது தான். ஆனால் இன்று அப்படியா? இப்படியான குறிக்கோள் எந்தவொரு நாடகத்திலும் காணப்படவில்லை. இன்றுவரை இன்றைய மெகா சீரியல்கள் 4மூகக் கட்டுக்கோப்புக்களை நடிப்பு வேடத்தால் அவிழ்த்து இதைப்புரியாது திணறுகின்றது இன்றைய சமூகம். இந்த நாடகங்களில் யார் தான் மோகம் கொள்ளவில்லை. சிறியவர்கள் முதல் வயோதிபவர்கள் வரை இதுதான் கதை. அண்மையில் ஊடக நிறுவனம் ஒன்றில் கூட தங்கள் வேலைகளை முடித்த பின் ஊழியர்கள் சீரியல்கள் பற்றி அலசி ஆராய்ந்ததாக நண்பி ஒருவர் சிரித்தபடி சொன்னார்.
நாடகங்கள் எப்படி ஆழமாக வேரூன்றின என்று கேள்வி எழுப்பினால் இது தான் விடையாகின்றது.இன்று எல்லொரும் தங்கள் வேலைகளை அரைகுறையாக முடித்துவிட்டு செய்த பாதி செய்யாத பாதியில் ஓடி வந்து டைமுக்கு டி வி முன்னாடி அமர்வது தான் மாபெரும் தவறு. ஒரு விஷயத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதுவே எம்மை அடிமைப்பட வைக்கின்றது. ஒரு விதத்தில் அடிமைத்தனம் கூட இதற்குக் காரணமாகின்றது எனலாம். நடைமுறைகளுக்கு புறம்பானவற்றை எல்லாம் நாடகங்களில் காட்டும் போது போலி எது என்று அறியாமல் ஏமாறுகின்றது இன்றைய சமூகம். நினைக்கவே வேதனையாக உள்ளது. நாடக நடிகர்கள் தமது வருமானத்துக்காகவும் பொழுது போக்கிற்க்காகவும் இவ்வாறு நடிக்கின்றார்கள். ஆனால் அதனைப் பார்ப்பவர்கள் வெறும் பொழுது போக்கிற்காக மாத்திரம் பார்த்துச் செல்வதில்லை. உயிர் கொடுத்து அதற்கு உண்மையைப் போல் உருவம் கொடுக்கிறார்கள். நமது வாழ்க்கையில் நடப்பது போல் உணருகிறார்கள். இவர்களுக்கு எவ்வாறு பாடம் புகட்டுவது? நாடகங்களில் பயன்படுத்தும் தந்திர முறைகள், கொடுமையான சூழ்நிலைகள் இவற்றையெல்லாம் தயாரிப்பாளர் தயாரித்து வழங்குவதன் நோக்கம் நாடகத்தை சுவாரசியமான முறையில் கொண்டு செல்வதற்கான உபாய முறை ஆகும். ஆனால் சிலர் இவற்றை எல்லாம் பார்த்து விட்டு தமது குடும்ப உறவுகளில் இவற்றை எல்லாம் செய்யப் பார்க்கிறார்கள். இதனால் சிலரின் குடும்பங்கள் பிரச்சினைகள் பிரிவுகளை எதிர் நோக்குகின்றன. உறவுகள் சின்னாபின்னமாகச் சிதறுகின்றன. நாடகங்களில் வரும் சில கொடுமையான சோகமான காட்சிகள் சிலரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்.

மெகா சீரியல் உங்கள் வாழ்க்கையை வளம் படுத்தாது உள்களைவ hழ விடாமல் செய்து விடுகின்றது. நாடகங்கள் மீதுள்ள மோகத்தைக் குறைப்பதற்கான வழி முதலில் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டும். உடனடியாக மாற முடியாவிட்டால் தொடர் நாடகங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து குறுநாடகங்கள் பாருங்கள். பெற்றோர் நாடகங்களைப்பார்ப்பதால் வீட்டில் உள்ள சிறுவர்களும் சேர்ந்து உட்கார்வார்கள். அவர்களைப் “போய்ப் படி என்று விரட்டாதீர்கள்” முதலில் நீங்கள் பார்ப்பதைக் குறையுங்கள். சிறுவர்களின் படிப்பும் நாடக வெறியால் பாதிப்படைகின்றது. பெரியவர்கள் தவிர்க்கும் போது சிறியவர்களும் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். நடிப்பு, நாடகத்தைப் பார்ப்பதை வெறும் பொழுது போக்காகவே கருதுங்கள்.

நடிப்புக்கு உயிர் கொடுக்காதீர்கள். நாடகத்தைப் பார்த்துவிட்டு கண்ணோடு கழற்றி விடுங்கள். மூளைக்கும் இதயத்திற்கும் எடுத்துச் செல்லாதீர்கள் அன்பான நாடகப் பிரியர்களே!


பெற்றோர்கள் தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு, இந்த எல்லையைத் தாண்டி பறக்கச் சிறகுகள் தருபவர்கள் தான் இந்த நண்பர்கள். அவர்கள் தான் நம் உயரத்தை அளக்கும் அளவு கோலாக உள்ளனர். உள்ளங்களைப் புரிந்து கொள்ள எம்மை உவகையுடன் ஊக்குவிக்கிறார்கள். வாழ்வின் வெற்றி என்பது, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதிலேயே தங்கியுள்ளது. வாழ்வின் வெற்றி கூட அதுவாக இருக்கலாம். இந்தத் தேடல் எல்லோருக்கும் வெற்றி அளிப்பதில்லை. எமது ஒவ்வொரு ஏற்றங்களுக்கும் தாமே ஏணியாகத் தம்மை அர்ப்பணிப்பவர்கள் தடம் மாறி விழும் போது கூட மண்ணில் விழ விடாது தமது கரங்களில் ஏந்திக் கொள்கிறார்கள். மீண்டும் தடம் பதிக்கத் தட்டிக் கொடுக்கிறார்கள். பூமியின் மீது புன்னனைப் பூக்களைப் படரவிட்ட அனைவருமே நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தார்கள். தவறான நண்பர்கள் கிடைத்தால் அந்த நிலைமையைச் சொல்ல என் பேனா முனை தயங்குகின்றது.

எல்லா உறவுகளும் நட்பில் முடிவதே, உறவுகளின் கடைசி அத்தியாயம். நாம் நல்ல உள்ளங்களைத் தேர்ந்தெத்து இதயத்தின் பள்ளங்களை இனிமையாக நிரப்ப முற்பட வேண்டும். தங்களைத் தாங்களே நேசிப்பவர்கள் தங்கள் நண்பர்களைக் கண்ணாடியாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம் தங்களே விம்பமாக பிரதிபலிக்கக் கண்டு மகிழ்கிறார்கள். அதாவது உங்கள் நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணாடியைப் போல் வெளிப்படையாகவும் தூய்மையான அன்புடனும் இருக்க வேண்டும். உயர்ந்தவற்றை நேசிக்க வேண்டும்.

இவ்வாறு நேசிப்பவர்கள் தங்கள் நண்பர்களை ஓவியமாக நேசிக்கிறார்கள். அவர்களிடம் தம்மை அனுசரிப்பதற்காக சிற்பங்களைச் செதுக்குகிறார்கள். வைராக்கியத்தைக் கற்றுத்தரும் நட்பு வாய்க்கப்பெற்றவர்கள் விடா முயற்சியுடன் வீரமாய் வாழ்க்கையில் போராடுகிறார்கள். நாம் பழகுபவர்கள் எல்லோரும் தோழர்களாக முடியாது. வசதியைப் பார்த்து நட்பு வரக்கூடாது. பொருளுக்காக உண்டாகும் போகம் அல்ல நட்பு. அன்பின் அத்திவாரமாய் எழுப்பப்படும் கோபுரம் தான் நட்பு. உண்மையான நண்பர்களானால் நாம் பூவாகும் போது மெல்ல வருடும் தென்றலாக வேண்டும். அவர்கள் தீயாகும் போது நாம் குளிர் ஓடையாக வேண்டும். இவ்வாறான பண்புகளே மீண்டும் நட்பை உயிர் பெறச்செய்து வாழவைக்கிறது இப்பூமியிலே….

நண்பர்கள் நம் உலகத்தை வித்தியாசப்படுத்தி புது வரவாக எம்மை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் ஒன்று அவர்களே உலகமாகக் கூடாது. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம். பகிர்தலும், பரிமாறுதலும், பரவசங்களும் பழக்கங்களாகட்டும்.

எனது நட்பை கடற்கரையில் எழுதினேன். அலை அடித்துச் செல்லவில்லை, படித்துச் சென்றது. நான் தயார் நண்பர்களே! நீங்கள் எப்படி….?


இந்தியர்கள் நடத்தி வரும் சலூன்கள் அனைத்தையும் மூடும்படி மலேசியாவில் உள்ள பெனாங் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது .
இதனால் அங்கு வசித்து வரும் இந்திய முடிதிருத்தும் தொழிலாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர் .
மலேசிய முழுவதும் மொத்தம் 2000 சலூன்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன .
இவற்றில் பெனாங் மாகாணத்தில் மட்டும் 700 கடைகள் உள்ளன .முடி திருத்தும் தொழிலில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக பிற நாடுகளில் இருந்து வந்து சலூன் நடத்தி வருவோரின் பணி அனுமதியை புதுப்பித்துதர பெனாங் மாகாண அரசு மறுத்து வருகிறது .அவர்களின் கடைகளை மூடும் படியும் உத்தரவிட்டுள்ளது .
இதனால் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சலூன்கள் மூடப்பட்டுள்ளன .
இதே போன்ற பிரச்சனை 2004 இல் வந்தது .என்றாலும் அப்போதைய தமிழ் அமைச்சர் டத்தோ எஸ் சாமிவேலுவால் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது .
பெனாங் மாகாண இந்திய முடிதிருத்துவோர் சங்க கமிட்டி உறுப்பினர் செல்வகுமாரன் கூறுகையில்" இந்த விவகாரம் எங்கள் வாழ்க்கைக்கு மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது .மனித வள மேம்பாட்டு அமைச்சு எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம் என்றார். "
மனிதர்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சினையாகவே உள்ளது .சலூன்கள் நடத்துவதிலும் பிரச்சனையா?சாதாரணமான விஷயம் கூட வெளிநாடு என்று பார்க்கும் போது இயல்பாகவே பெரிய விசயமாக மாறிவிடுகிறது .......இதுதான் வெளிநாட்டு காசின் வேலை என்பார்களோ !!!!!

அம்மா - இயற்கை எமக்களித்த கற்பகதரு
காதல் - அன்பு என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் விற்கும் தன்னியல்பான நாகரீக வியாபாரம்
கடிகாரம் - காலம் என்னைத் துரத்துகிறது. நீயும் காலத்தைத் துரத்துகிறாய். யாரை யார் பிடிப்பது என்பது தான் இவ்வட்டத்துக்குள் போட்டி
கவிதை – துயரத்தின் வெளிப்பாட்டை சொற்கள் கொண்டாடும் சுதந்திரம்.
தோல்வி – விழுந்த தழும்புகளை மறைக்கும் புதிய நாகரீகச் சொல்
பெண் - சிற்பியான இறைவன் படைத்து வியந்து பார்க்கும் சிலை
நம்பிக்கை – நாளைய உலகை உனதாக்கும் புதிய ஒரு ஆயுதம்.
சிந்தனை – உனக்குள்ளேயே மீண்டும் உன்னை உருவாக்கும் ஆற்றலைக் கொடுப்பது.
விருட்சம் - ஊர் வெயிலை தன் தலையில் தாங்க இயற்கை தந்த பெரிய குடை
உழைப்பு – உன் வியர்வையை எடை போடும் ஒவ்வொரு சதமும் திருமணம் - கழுத்தில் தாலி என்றால் மீதி என்ன? காலில் சுற்றி வேலி தான்
குழந்தை – புன்னைகையில் கதை பேசத் தெரிந்த ஒரு மலர்ப் பருவம்
புன்னகை – ஒவ்வொரு மனங்களும் திறந்து பேசும் தேசிய மௌன மொழி
கஞ்சன் - வாழ்வதற்காக என்று சொல்லிக் கொண்டு தினமும் மரணப்படுக்கைக்குள் செல்பவன்
சிகரெட் - நீ பிடித்தால் அது புகையும் அது உன்னைப் பிடித்தால் நீயே புகைவாய்
சரித்திரம் - இறந்த காலத்தின் நாளைய உயிர் உள்ளது என்பது
கடல் - எவ்வளவு தான் கைதட்டி ஆர்ப்பரித்தாலும் மேடை ஏற முடியாத தவழ மட்டுமே முடிந்த குழந்தைகள்
வேலைக்காரி – நான் ரொம்ப பிசி என்று உலகத்திற்கு காட்டும் பெண்ணின் அடைக்கல அங்கீகாரம்
தொலைபேசி – துச்சமென வெல்கின்றன தூரங்களை
நூலகம் - பல அறிஞர்கள் தன்னுள்ளே கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு வித அலை
நண்பன் - இருந்தால் நிழல் பிரிந்தால் உயிர்
அரசியல்வாதி – தேர்தலின் முன் அவன் உங்கள் கைகளைப் பிடிப்பான் பின் நீங்கள் அவன் கையைக் கூடப்பிடிக்க முடியாது
ஓவியம் - வர்ணங்கள் கதை பேசும் ஒரு விதக் கலை
சுயநலவாதி – விண் மீனுக்காகவேனும் வலை வீசத் தயாராக உள்ளவன்
அரங்கு – பேசாதவனையும் பேசவைக்கும் புது உலகம்
பள்ளி – துள்ளித் திரிபவனுக்கு புள்ளி கொடுத் வெள்ளித் திசை காட்டுவது.
இவை எனது கணிப்பில். ஆனாலும் மாறக் கூடியது.

(டிசம்பர் 10ம் திகதி 61வது மனித உரிமைகள் தினம்)
இன்றைக்காவது நினைவு கோருவோம்…

மனிதன் இப்பூமியில் பிறந்த கணத்திலிருந்து அவனுக்கும் அவன்சார் சமூகத்திற்கும் பொதுவான சில அடிப்படை உரிமைகள் உரித்தானவை என்ற மேலோட்ட எண்ணங்களே இன்றைய மனித உரிமைக்கான சிந்தனைகளை பல விதமாக விளைவித்தது. மனித உரிமைகளின் வளர்ச்சி நிலைமைகள் மனித சமூதாய வளர்ச்சியின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது.

ஆரம்பநிலையில் மனிதன் கூட்டாகவே வாழ்ந்து வந்தான். இதனால் இயன்றவரை பிறர் நலன்களுக்கு ஊறுவிளைவிக்காது இசைந்து வாழும் இயல்புகளைக் கற்றுக்கொண்டான். இவ்வாறு சமுதாய அமைப்பு கட்டியெழுப்பப்பட கடமைகளும் உரிமைகளும் அவனுக்கு உரித்தாகத்தொடங்கியது. இவை காலப்போக்கில் சமூக நடத்தைக்கோட்பாடுகளாக உருவாக்கப்பட்டு மதிக்கப்பட்ட நிலையில் அந்தந்த சமுதாயங்களின் உரிமைகளாக பரிணாமத்தைப் பெறத்தொடங்கியது.

இயல்பான சுதந்திரத்தோடு வாழவும் தான் இசைந்துவாழும் சமுதாயத்திற்கான கடமைகளை முழுமையாக ஆற்றவும் மனிதன் முற்படும் வேளைகளில் உரிமைகள் மறுக்கப்படும்போதோ அல்லது அளிக்கப்பட்டு வந்த உரிமைகள் தடைசெய்யப்பட்டு வந்தாலோ மனித சமுதாயம் அப்படிப்பட்ட நிலைமைகளைப் பொறுத்துக்கொள்வதில்லை. இதனால் தனது சமுதாயத்தின் மேல் கேள்விக்கணைகளைத் தொடுத்தான். இவையே தனிமனித உரிமைகளின் மூல விதைகளாகும். தனிமனிதன் மேல் எழுப்பும் கேள்விகளை சமுதாயம் அங்கீகரித்து இடமளிக்கும் போது தான் அவனது உரிமைகள் உறுதியளிக்கப்படுகின்றது.அத்தகைய உரிமைகள் “மனித உரிமைகள்”எனும் தொகுப்பில் வந்து சேர்கிறது.

உரிமைகள் வழங்கப்படுவதில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் கூட மனித உரிமைகள் குறித்த சிந்தனைகள் பழங்காலம் முதலே அவ்வப்போது வெளிப்பட்டு வந்துள்ளன.சங்ககால இலக்கியங்களில், பழைய கிரேக்க ரோமானிய இலக்கியங்களில், கிறிஸ்தவ மதபோதனைகளில், மில்ட்டன், ஜான்லாக் ஆகியோரது படைப்புக்களில் ஆங்கில சட்டவியல் நூல்களில், இன்று பன்னாட்டடுச் சட்டத்தின் பிதாமகன் எனப் போற்றப்படும் டச்சு நாட்டைச்சேர்ந்த “ஹியூகோ குரோட்டிஸ்” என்பவரது நூல்களில் உரிமைக் கோட்பாடுகளின் சிற்றொளிக் கீற்றுக்கள் ஆங்காங்கு சிதறிக்கிடப்பதைக் காணமுடிகிறது.

கால ஓட்டத்தில் மனித உரிமைகளுக்காக போராட்டம் தலைதூக்கிய வேளையில் மனித உரிமைப் பாதையில் தோன்றிய சில முக்கிய மைல்கற்களை இன்று ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.




• 1215ம்ஆண்டு -இங்கிலாந்தில் மாக்னா கார்ட்டா சாசனம் பிரகடனம். (மனித உரிமைப் பயணத்தில் வைகறைக்கீதம்!)
• 1222ம் ஆண்டு-ஹங்கேரி நீதிமன்ற விசாரணைகளின்றி குற்ற நிரூபணம் இல்லாமல் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கக்கூடாது.
• 1689ம் ஆண்டு-இங்கிலாந்து-உரிமைகள் சட்டம்.
• 1789ம் ஆண்டு-பிரான்ஸ்-பிரெஞ்சுப் புரட்சி-மனித உரிமைகள் பிரகடனம்.
• 1791ம்ஆண்டு-அமெரிக்கா –உரிமைக் சட்டம்
• 1971ம்ஆண்டு-ரஷ்யா-ரஷ்யப் புரட்சி
• 1922ம்ஆண்டு-பிரான்ஸ்-மனித உரிமைப் பன்னாட்டு கூட்டமைப்பு.
• 1945ம்ஆண்டு-ஐ.நா அமைப்புச்சாசனம்-நாடற்றோர் நிலை குறித்த ஒப்பந்தம்.
• 1948ம்ஆண்டு-ஐ.நா உலக மனித உரிமைகள் பிரகடனம்.
• 1953ம்ஆண்டு-ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் அமைப்பு.
• 1959ம்ஆண்டு-ஐ.நா குழந்தைகள் உரிமைப் பிரகடனம்.
• 1976ம்ஆண்டு-ஐ.நா குடியுரிமை அரசியல் உரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்பாடு ஐ.நா பொருளாதார சமூக பன்னாட்டுரிமைகள் குறித்த உடன்பாடு
• 1993ம்ஆண்டு-உலகளவில் பயங்கரவாதத்தைத் தடுக்க நடவடிக்கைகள் குறித்து ஐ.நா தீர்மானம் -மனித உரிமைகளும் பயங்கரவாதமும்


இவ்வாறான எழுச்சிகளும் பிரகடனங்களும் சமுதாய மனித உரிமை விடுதலைக்கான உந்து சக்தியை வழங்குவனவாக அமைந்தது.இவ்வாறு இருக்கையில் சர்வதேச முயற்சிகள் தளராது செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. மனித உரிமை மீறலை சர்வதேச அரங்கு ஒரு போதும் சும்மா பார்த்துக்கொண்டிருப்பதில்லை.போர்க் கைதிகள் என்றால் அவர்கள் மனிதர்கள் இல்லையா? இது குறித்துக் கூட சர்வதேச முயற்சிகள் இன்னொரு மனித உரிமைக்கான களத்தை உருவாக்கியது. 2ம் உலகப் போரில் புதையுண்டு உயிரற்ற தறுவாயில் உள்ள மனிதத்தைப் பாதுகாக்க கைதிகளுக்கான வன்முறையின் உச்சக் கட்டத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க 1864ம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த முயற்சியின் மூலம் தான் உலகளாவிய செஞ்சிலுவைச் சங்கமும் உருவாக்கப்பட்டது. இதுவும் மனித உரிமையின் ஒரு வெற்றித் தூண் தான்.

மனித உரிமைகளின் பாதுகாப்பில் ஐக்கிய நாடுகளின் பங்களிப்பை எடுத்து நோக்குவோமானால் அமெரிக்காவில் சான்பிரஸ்கோ நகரில் 25ம் திகதி ஏப்ரல் 1945ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் 50 நாடுகளின் பங்கேற்பில் ஐக்கிய நாடுகளின் அமைப்புச்சாசனம் கையெழுத்திடப்பட்டது. ஐ.நா அமைப்புத்தான் “மனித உரிமைகளின் காவலராக” விளங்குகிறது என்பதில் ஐயம் இல்லை. மனித உரிமைகள் கமிஷனால் 10ம் திகதி டிசம்பர் மாதம் 1948ல் உலக மனித உரிமைகள் சாசனம் மட்டும் வெளியிடப்பட்டது. அதன் பின் இரு பகுதிகளாக 16ம்திகதி டிசம்பர் 1966ல் ஐ.நா பொதுச்சபையால் நிறைவேற்றப்பட்டு 3ம்திகதி ஜனவரி 1976 முதல் அமுலுக்கு வந்த குடியுரிமைகள் அரசியல் உரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்பாடு மற்றும் பொருளாதாரச் சமூகப் பன்னாட்டுரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்பாடு ஆகியவற்றை வெளியிட்டன. 1976முதல் இவை அமுலுக்கு வந்தன. உலக மனித உரிமைகள் பிரகடனம,; குடியுரிமை அரசியல் உரிமைக் கோட்பாடுகள், இனப்படுகொலை , அடிமை ஒழிப்பு, கட்டாயப்படுத்தி வேலைவாங்குதல், பாகுபாடு ஒழிப்பு, கல்விப்பாகுபாடு அகற்றல், அகதிகள் நாடற்றோர் நிலைமைகள் இவ்வாறான இடர்களுக்கு ஐ.நா உரிமைக்குரல் கொடுத்தது.

1978ம் ஆண்டு 2ம்குடியரசு யாப்பில் உத்தரவாதப்படுத்தப்படும் உரிமைகளும் சுதந்திரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 1978இன் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் UDHR இலும் இடம்பெறும். 18 மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் உள்ளடக்கி உள்ளன. இவற்றுள் அனேகமானவை சிவில் உரிமைகளாகும். இலங்கையில் மனித உரிமைகளைப்;பாதுகாக்கும் ஒம்புட்ஸ்மன், மனித உரிமைகள் ஆணைக்குழு,இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் நிரந்தர ஆணைக்குழு, அரச கரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பெண்கள் விவகாரம் பற்றிய தேசிய குழு, பொலீஸ் மற்றும் பொலீஸ் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, HRTF (மனித உரிமைகள் நடவடிக்கைப் படை) , ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் போன்றனவும் இடம்பெறுகின்றன.

இவ்வாறு போராடிப்பெற்ற உரிமைகள் இதனைப் பாதுகாக்க அமைப்புக்கள் ஆணைக்குழுக்கள் போன்றன நிறுவப்பட்டும் எந்த விதமான பயனும் அற்ற நிலையிலேயே கிடக்கிறது.இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்திலும் மனித உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.மனிதத் துடிப்பின் அலறல்கள் எங்கும் ஒலிக்க மனிதம் சாலை ஓரச் சருகாகிறது.சமவாயங்கள் பிரகடனங்கள் அந்தந்த மாநாட்டில் மட்டுமே உயிர் பெற்றவை.பின் இருந்த இடமில்லாமல் போய்விட்டது.

உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் மனித கௌரவத்தையும் நீதியையும் உறுதிப்படுத்த இயலாதிருக்கும் சூழ்நிலையில் இன்றைய தினத்துக்கான தொனிப் பொருள் “மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாத்து மேம்படுத்த அணிதிரளுமாறு சமுதாயத்தின் சகல பிரிவினர்க்கும் விடுக்கின்ற ஓர் அழைப்பாக இருக்கிறது”.மோதல்கள் இடம்பெறுகின்ற நேரங்களிலோ அல்லது சமூகங்கள் அடக்கு முறைக்குள்ளாகும் வேளைகளிலோ மாத்திரம் கருத்தில் எடுக்க வேண்டிய ஆவணம் அல்ல.மனித உரிமைகள் என்ற பதம் இன்று உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்படுவது மாத்திரமல்ல துஷ்பிரயோகமும் செய்யப்படுகிறது.இப்பதம் அரசியல் ஆதாயத்துக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.மனித சுதந்திரங்களை பாதுகாப்பதற்காக பாடுபடுபவர்கள் மாத்திரமல்ல நிர்மூலஞ் செய்பவர்களும் மனித உரிமைகள் என்ற பதத்தை தங்களின் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இன்றைய தினத்தில் நாம் சொல்லிக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது.உரிமைகளை பிரகடனம் செய்வதனால் விடுதலையைப் பெறமுடியாது.செயற்பாடுகளை மாற்றியமைப்பதன் மூலமே அவற்றை நடைமுறைப்படுத்த முடியும்.

இலங்கை வரலாற்றில் என்றுமே இடம் பெற்றிராத அளவுக்கு ஜனநாயக மரபுகளை குழிதோண்டி புதைப்பதற்கு அவசரகால வழிமுறைகளும் பயங்கரவாத தடைச்சட்டமும் வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன.அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகளுக்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டிருந்த போதும் 1979அம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இச் சட்டமூலங்கள் அடிப்படை உரிமைகளின் பயன்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.இன்று அரசு எதிர் நோக்கும் G SP+ வரிச்சலுகை பிரச்சினை கூட மனித உரிமைகள் சரியான முறையில் பேணப்படாமையே காரணம் காட்டப்படுகிறது.வரிச்சலுகை நிபந்தனையில் முக்கியமானது சலுகை பெறும் நாடுகள் தமது நாட்டில் மனித உரிமைகளைச் சரியான முறையில் பேணப்பட வேண்டும் என்பதாகும்.மனித உரிமையாலேயே எமது நாட்டின் பொருளாதாரம் சீர்குலையப் போகிறது என்றால் அதன் சக்தியை சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் கோருகிற ஒவ்வொரு உரிமையையும் மற்றவருக்கும் கொடுங்கள்.

நவநாகரீக உலகில் காதல் என்ற போர்வையில் வணிகம் செய்யாதீர் வாலிபத்தை....
காதல்….காதல்….என எங்கே எப்போது பார்த்தாலும் காதல் இருந்து கொண்டே இருக்கிறது. காதலின் துடிப்பு தான் பூமிப்பந்தை இயங்க வைக்கிறது. சினிமா, தொலைக்காட்சி, நாவல், பத்திரிகை என்று அனைத்து ஊடகங்களையும் இயங்க வைக்கும் அடிப்படைக்காரணியாக இது அமைகிறது. காதல் என்பது இன்றைய நவீனயுகத்திலும் இளைஞர்களை இயக்கும் தாரக மந்திரம் என்பது மறுப்பதற்கில்லை.

சரி காதல் என்றால் என்ன?
விஞ்ஞான ரீதியாக நோக்கினால் உடலில் ஏற்படும் ஹோமோன் மாற்றங்களின் செயல்பாடுகள் தான். இது ஈசியான பதில் கூட….வேறு சிலரோ “ வேறு வேலையில்லாத் தொழில்”என்பார்கள். உண்மையில் காதல் என்பது நம்பிக்கை, அன்பு, நட்பு, பொறுப்பு, புரிந்துணர்வு என்ற ஐந்து தூண்களின் மீது அமைக்கப்பட்ட அழகிய பளிங்குமாளிகை. காதலில் பொறாமை, நம்பிக்கையீனம், சுயநலம் போன்ற வியாதிகள் இருக்காது.

காதல் என்பது உங்கள் இதயத்தை அப்படியே மற்றவரிடம் எவ்வித நிபந்தனையும் இல்லாது தூக்கிக்கொடுப்பதாகும். இதயம் அங்கே பத்திரப்படுத்தப்படும் என உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். காதலில் இருப்பவர்கள் சந்தோஷமாக ஆணித்தரமான நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் காமத்தில் விழுந்தவர்கள் தங்களைப் பார்ப்பதற்குக்கூட அருவருப்பார்கள். இதுவே யதார்த்தம். காதல் எதையும் கேட்காது கேட்காமலே எதையும் கொடுக்கத்துணியும்.

முதல்பார்வையில் காதல் என்பது பெரும்பாலும் டீன்ஏஜ் வயதில் ஏற்படும். இது முக்கியப்படுத்துவது முக அழகையும் எதிர்பாலாரின் செயற்பாடுகளையும் தான். பருவமடைந்த காலங்களில் மனதிலும் உள்ளத்திலும் புது அழகு தேங்கிக்கிடந்து எதை எதையோ எல்லாம் தேடிக்கொண்டிருக்கும். அப்போது கண்ணுக்கு தெரிவதெல்லாம் அழகாகவும் வர்ணிப்பதற்குரியனவாகவும் தோன்றும். அனைத்தும் உங்களுக்கே உரித்தானது நான் அதை செய்தாலோ எடுத்தாலோ என்ன? என்ற எண்ணம் கூட உள்ளத்தில் உருளும். மிகவும் உற்சாகமானதும் அதே வேளை இக்கட்டான சூழ்நிலையிலும் மாட்டிவிடும் காலகட்டப்பருவம். என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் காதலில் மிகவம் அவதானம் தேவை.

ஸ்கூல், கம்பஸ், அலுவலகங்களில் ஆண்கள், பெண்கள் இருவரும் நட்புக்கொள்வார்கள். இந்த நட்பில் நல்ல நம்பிக்கை வேரூன்றியிருக்கும். இதில் எல்லோரும் காமத்துடன் இருப்பார்கள் எனக் கூறமுடியாது. இங்கு அன்பும் பொறுப்பும் இருக்கும். ஆனால் இது உண்மைக் காதல் இல்லை எனலாம். மற்றொரு புறம்….
அதிதீவிரமாகக் காதலில் இறங்குபவர்களும் உண்டு. இவர்களுக்கு சமூகம் பற்றிய அக்கறை இல்லை. முழு நேரத்தையும் காதலுக்காகவே செலவிடுவார்கள். இங்கு காமமும் இல்லை. எதிர்கால நோக்கம் இல்லை. அப்போது இது உண்மைக் காதலாகவும் இருக்காது. சிலர் பொழுதுபோக்கிற்காகவே காதலிப்பவர்கள். காரணம் தன்னைப் பற்றி சுற்றத்தில் உள்ளவர்கள் பெருமையாக கதைப்பார்கள் என நினைத்து போலி முகமூடி அணிவார்கள். காதலுக்காக இங்கு பொறுப்பு என்ற சொல்லுக்கு இடமே இல்லை. உண்மைக் காதல் துளிர்விட சாத்தியமும் இல்லை.

முட்டாள் தனமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள். அதாவது எவ்விதத்திலும் பொருந்தாக்காதல். அதாவது பெரிய ஸ்டார்களை விளையாட்டு வீரர்களை சுப்பர்மான்களை அதிதீவிரமாகக் காதலிப்பார்கள். பலர் தமது காதலை சொல்லாமலே மனதில் பூட்டிக்கொள்கிறார்கள். இது ஒரு வகையான குருட்டுத்தனமான காதல் தான். என்றுமே நிஜமாகாது என்றும் இது நினைவிலிருக்கட்டும். இங்கு உண்மைக்காதலுக்கு இடமில்லை.

உறவுகளுக்குள் சிலர் மீது காதல் இருக்கும். இங்கே சேர்ந்தே பொறுப்பும் இருக்கும். விசுவாசம் இருக்கும். அத்துடன் நம்பிக்கையின் உச்சக்கட்டத்தைப் பார்க்கமுடியும். ஆனால் காமத்தின் வாசல் நிரந்தரமாகவே அடைக்கப்பட்டிருக்கும். இதனை அன்பு என்றுதான் வரையறுக்கலாம். காதல் எனப்பொருள்படமுடியாது.

இயைபான காதல்முதலில் நம்பிக்கையுடன் தான் தொடங்கும். பொறுப்ர்ணர்வு தான் அச்சாணியாக இருக்கும். அதன் பின்னரே காமத்திற்கான சாரல் தூறத் தொடங்கும். இக்குணங்கள் சம விகிதத்தில் கலக்கப்படுமானால் இங்கு நிச்சயமாக உண்மைக்காதலுக்கான கரு உருவாகிறது. காதலுக்கும் காமத்திற்கும் பெரிய அளவில் தொடர்பில்லை. நட்பும் காதலும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். எங்கு வேறுபடுகிறதென்றால் எந்தப்புள்ளியில் பொறுப்பு அதிகமாகிறதோ அந்தப்புள்ளி காதல் எனும் தொடர்கதையை வரைகிறது. ஆனால் இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் மயிரிழை தான்.

முதல் பார்வையில் காதல் வரவேண்டும் என்பது விதியல்ல. ஆரம்பத்தில் பிடிக்காதவர்கள் கூட பழகும் சூழ்நிலைகளினால் காதலர்களாகக்கூடும். அழகான இருவருக்குத் தான் காதல் வரும் என்றில்லை. இது எவருக்குள்ளும் நுழையக் கூடும். ஏதோ ஒரு வழியாக வந்த பின்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அது வரை உயிரைப்படாத பாடு படுத்தும். முதல் பிரசவத்தை விட வலியானது ஆனால் அதை விட சந்தோஷமானது. அடிக்கடி சந்திக்காதவர்களிடம் காதல் தோன்றுவதற்கு சாத்தியம் குறைவாகவே உள்ளது. எப்போதும் ஏதோ விதத்தில் சந்தித்துக் கொள்பவரிடம் ஏதோ விதத்தில் காதல் உள்ளிறங்கத் தொடங்குவதற்கான சாயல் காணப்படுகிறது. ஆனால் இன்றைய அவசர உலகத்தில் இருந்து சாப்பிடக்கூட நேரமில்லாத போது காதலும் அந்த நிலையில் தானே இருக்கும். கண்டதும் காதல் …… என்ற போக்கில் பொழுது போக்கற்காகவே போகிறது. இது இறுதியில் உண்மையாகா விடில் உயிரைத் திருடி விடுகிறது.

இது மிகவும் நகரங்களில் தனது வித்தையை இளைஞர் உள்ளங்களில் விதைத்த வண்ணம் இருக்கிறது. அதற்கேற்ற படி சிந்திக்காத இளைஞர்களும் சிந்தனைகளைத் தொலைத்து தம்மை அதற்கே அதற்கே அடிமையாக்குகிறார்கள். இப்படியான காதல் மெல்ல மெல்ல கிராமங்களையும் தனக்கேற்றபடி கிள்ளிப்பார்க்க நினைக்கிறது. இதுவே நிதர்சன உண்மை.

இப்போது சொல்லுங்கள் உங்கள் காதலின் நிலை எனது எந்த வரிகளில் வந்து சேர்கிறது???....?

எங்கள் ஊரில் தான் வீதிகளில் நாய்களும் மாடுகளும் ஆடுகளும் சன நெரிசலை ஏற்படுத்தும். அது பறவாயில்லை. கலைத்துவிடலாம். கொழும்பில் எதனையும் காணமுடியாது. ஆனாலும் வாகன நெரிசல் தான். ஆனால் ஆபிரிக்காவில் பாருங்கள் என்னவெல்லாம் வீதியை மறைக்கின்றது என்று. இனி இறங்கி கலைக்க மனம் வருமா?



http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=0&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=1&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=2&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=3&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=4&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|
http://by134w.bay134.mail...live.com/att/GetAttachment.aspx?tnail=5&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|


http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=6&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=7&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=8&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=9&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=10&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=11&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=12&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|
http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=14&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|


http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=15&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=16&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=17&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=18&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|

http://by134w.bay134.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=19&messageId=deda45ce-c7f2-40a3-a650-88ef2d6e1141&Aux=4|0|8CBA93D566B79F0|


Followers

About this blog

Labels