Showing posts with label வன்முறை. Show all posts
Showing posts with label வன்முறை. Show all posts

நாடாளுமன்றத்துக்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் கடந்த மாதம் 26ம் திகதியாகும். அன்றிலிருந்து இன்று வரை (24.03.2010) 147 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


87 பாரிய சம்பவங்களில் 22 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதே வேளை பொதுச்சொத்து துஷ்பிரயோகம் மற்றும் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தமது கவனத்தை திருப்பியுள்ளதாக வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பொதுத் தேர்தலில் எத்தனை வன்முறைகள் நடைபெறப் போகின்றனவோ? எண்ணுக்கணக்குக்கு மிஞ்சிவிடும் போல கிடக்குது. ஜனவரி மாதக் கடைசியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னர் எப்போதும் இல்லாதளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் உயர்ந்திருந்தன. தேர்தல் நெருங்கி இறுதியன்று அண்மித்தபோது 800 இற்கு மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.


வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பெப்ரவரி 26ம் திகதியிலிருந்து மார்ச் 8ம் திகதி வரை 75 (65சதவீதம்) பாரிய வன்முறைச் சம்பவங்கள் உள்ளடங்கலாக 115 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 75இல் 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பானதாகும்.

  • 06 காயப்படுத்தல் சம்பவங்கள்
  • 03 பாரிய காயப்படுத்தல் சம்பவங்கள்
  • 22 தாக்குதல் சம்பவங்கள்
  • 14 கொலை அச்சுறுத்தல்கள்
  • 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல்
  • 05 தீவைப்புச் சம்பவங்கள்.


  • பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் குருநாகல் மாவட்டத்தில் 6 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
  • தென் மாகாணம்- 05 உட்கட்சி மோதல் சம்பவம்.
  • சப்ரகமுவ மாகாணம்- 12 பாரிய சம்பவங்களுள் 05 துப்பாக்கி பிரயோகம்.
  • கிழக்கு மாகாணம்- 03 சம்பவங்கள்.
  • வடமத்திய மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.
  • மேல் மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.
  • வட மேல் மாகாணம்- 01 சம்பவம்.
  • மத்திய மாகாணம்- 01 சம்பவம்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அவதானிக்கக்கூடிய இன்னுமொரு விடயம் உட்கட்சி மோதல்களுக்கு வழிவகுக்கும் விருப்பு வாக்கிற்கான போட்டியாகும். ஐ.ம.சு முன்னணிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள 91 முறைப்பாடுகளுள் 23 முறைப்பாடுகள் அக்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலில் தமது பக்கம் தாம் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்றுவிட வேண்டும். தாம் ஆசனத்தைப் பெறவேண்டும் என்ற அரசியல் வெறியும் அதிகார மோகமுமே தேர்தல் கால வன்முறைகளுக்கு வித்தாகவும் உரமாகவும் அமைகின்றது.

வாக்குரிமை என்பது ஒவ்வொரு வாக்காளனும் தனது தெரிவுக்கும் விருப்பத்துக்கும் ஏற்றாற் போல அதனைப் பயன்படுத்தல் என்ற சுதந்திரச் செய்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. அந்தக் கோட்பாட்டை தகர்த்து எறியும் விதத்தில் அரசியல்வாதிகள் தமது அடாவடித்தனத்தைக் கட்டவிழ்த்து தாமே வெற்றிபெற வேண்டும் என்று செயற்படுவது இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாகச் சாதாரணமாகி விட்டது.

தேர்தல் என்பது வன்செயல்களோடு சேர்ந்தது என்ற நிலை இங்கு வழமையாகிவிட்டது.

அனேகமாக தேர்தல் கால மோதல்களும் வன்முறைகளும் போட்டியிடும் எதிரணி கட்சிகளுக்கு இடையே நடைபெறுவது தான் வழக்கமாக இதுவரை இருந்து வந்தது. இம்முறை ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்வது தான் கவலைக்குரிய விடயமாகும்.

மக்களாட்சி என்ற ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிந்து துவம்சம் செய்துவிடவல்ல தேர்தல் வன்செயல்களை தடுப்பதும் அவற்றில் ஈடுபடுவோரை பாகுபாடின்றி தண்டிப்பதும் பக்கசார்பின்றி நடவடிக்கைகளை எடுப்பதும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பெரும் பொறுப்பு பொலீஸாரையும் நீதிமன்றங்களையும் சார்ந்தவை.

நஞ்சு மரம் முளையிலேயே கிள்ளி எறியத்தவறினால் மக்கள் ஆட்சி மல்லாக்காப் படுக்க நேரிடும். வன்முறைகள் தெளிவுபடுத்துவது ஜனநாயகம் கேலிக்குரிய பொருளாக மாறிவிட்டது என்பதைத்தான்.
நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் இவற்றை வருங்காலத்திலாவது தடுக்க அக்கறை காட்டுவார்களா?

இல்லை இனி இது தேர்தல் கால கலாச்சாரமாகுமா???

காதலிப்பவர்களில் சிலருக்கு ஒரு கொள்கை இருக்கின்றது 'தங்கள் காதலை காதலர் தினத்தன்று தெரியப்படுத்துவது" எண்டு. இது ஒரு வேண்டாத வேலை ... ஒருவனோ அல்லது ஒருத்தியோ இன்னொருவரை காதலிக்கும் போது அதனை வெளிப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் காதல் நிறைவேறாத சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, இதை தான் சொல்வார்கள் "காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன கதை" எண்டு.

காதலர் தினத்தின் பின்னரான நாட்களில் தமிழகத்தில் சில வேண்டத்தகாத உயிர் கொலை , தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன, யாழ்பாணத்தியும் ஒரு சம்பவம் நடந்ததாக கேள்விப்பட்டேன். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! தற்கொலை என்பது இயலாதவன் முடிவு. தன் காதல் நிறைவேறவில்லை என்பதற்காக கொலை செய்பவனை என்னவென்று சொல்வது. இனி சம்பவங்களை பார்ப்போம்.

காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஷர்மிலி ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தாரர். இவரை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஒரு கட்டத்தில் ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த சான்றிதழை ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், பயந்து போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், ஷாஜனை உதறிய ஷர்மிலி தாயிடம் தனக்கு வேறு வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார். அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

காதல் தோல்வியால் மனமுடைந்த கல்லூரி விரிவுரையாளர், கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சண்முகவர்த்தினி(26), ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். மாலை நேரத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். மகளது காதலுக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சண்முகவர்த்தினியை காலையிலும், மாலையிலும் பெற்றோர் பின்தொடர்ந்து வந்து கண்காணித்ததாக கூறப்படுகிறது. சண்முகவர்த்தினி தினசரி பொறியியல் கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு வந்து செல்வார்.நேற்று காலை 9:30 மணிக்கு சண்முகவர்த்தினி கல்லூரிக்கு வந்தார். சிறிது நேரத்தில் திடீரென கல்லூரியின் ஐந்தாவது மாடிக்கு சென்ற சண்முகவர்த்தினி, மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கல்லூரி துணை முதல்வர் ராமமூர்த்தி, கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சண்முகவர்த்தினியை தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு டாக்டர்கள், சண்முகவர்த்தினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.சண்முகவர்த்தினி, ஜெகன் என்பவரை காதலித்து வந்ததாகவும், இதை பெற்றோர் கண்டித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று சண்முகவர்த்தியிடம் ஜெகன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்தே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). இவர் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்தார். கடந்த ஒரு வருடமாக பின்னாலேயே சுற்றியுள்ளார். ஆனால் அவரது காதலை ரேவதி ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார். நேற்று காலை ரேவதி கல்லூரிக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரானேஷ், மாணவி ரேவதியின் வலது காதை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காது அறுந்து ரத்தம் கொட்டியதால் ரேவதி அலறினார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அறுந்து போன காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் இறங்கியுள்ளனர்.

மூன்று சம்பவங்களும் எப்படி இருக்கின்றது, ஒன்று கொலை, மற்றையது தற்கொலை, மூன்றாவது வன்முறை, இந்த மூன்றையும் காதல் எனலாமா?

Followers

About this blog

Labels