







இலங்கை , உள்ளுராட்சி சபை , தேர்தல் , முட்டை








.jpg)


இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தனது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியிட்டது. 2005ல் சுனாமி ஏற்படுத்திய அழிவைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக இந்த சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருந்தது. உலகில மொத்தமாக 14 நாடுகள் இச் சலுகையை அனுபவிக்கின்றன. அதிலும் ஆசியாவில் இச்சலுகையைப் பெறும் ஒரே நாடு இலங்கை தான். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 7200 வகையான பொருட்களை எந்த விதமான சுங்கத் தீர்வையும் இன்றி ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலமாக வருடாந்தம் இலங்கை அரசு 150 மில்லியன் ரூபாவை வருவாயாகப் பெறுகிறது.









சீனாவின் நுகர்வுச் சந்தையை இலக்காகக் கொண்டு புதிய ஏற்றுமதிப் பொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட விளம்பர நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டது.முன்னர் சீனாவிற்கு மூலப் பொருட்களே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இலங்கை , சீனா , மட்பாண்டம் , யானைத்தந்தம்
ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிரணியின் பிரதான வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 175 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். இருவருக்கும் இடையில் 18 இலட்சத்து 42 ஆயிரத்து 749 வாக்குகள் வேறுபடுகிறது. பெரு வெற்றியை இந்த வேறுபட்ட வாக்குகள் தான் பறைசாற்றுகிறது. 22 தேர்தல் மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷ 16 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா ஏனைய 06 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் சிறுபான்மை இனமே இல்லை என்றார். ஆனால் தேர்தல் முடிவுகள் இந்த நாடு பெரும்பான்மை இனம், தமிழர் சிறுபான்மை இனம் என பிரிந்து கிடப்பதைத் தெளிவாக விளக்குகிறது. அதே வேளை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் போரின் முடிவுடன் தகர்ந்து போய் விடவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் என இனம் காட்டிக் கொள்வோர் அரசாங்கத்தின் சார்பாக சரியான முறையில் அபிவிருத்தி உட்பட அனைத்து விடயங்களிலும் சேவையாற்றத் தவறியதன் விளைவாகவே மக்கள் இம் முடிவை எடுத்தனர்.
ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எந்த வேட்பாளருக்குக் கூடுதலான ஆதரவை வழங்கினார்கள் என்பது பிரச்சினையல்ல. சுமார் 30 வருட கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து தோன்றியிருக்கும் சூழ்நிலையில் ஜனநாயகச் செயன்முறைகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டியுள்ளமை உற்சாகம் தருவதாக உள்ளது. தென்னிலங்கையின் அரசியல் கட்சிகளினால் ஜனாதிபதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதில் அக்கறை காட்டியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வழமையான தேர்தல்களை விட இம்முறை சற்று வித்தியாசம். தமிழ்க்கூட்டமைப்பின் நேரடி ஆதரவுடன் தமிழர்கள் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் தரப்பாகவுள்ளனர். எனவே இருபெரும் வேட்பாளர்களின் வாக்குத் திரட்டும் நடவடிக்கைகளும் தமிழர் பிரதேசங்கள் நோக்கி நகர்ந்திருக்கின்றது. தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கையுடன் ஆங்காங்கே சூட்டுச்சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதுவரை மூவர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். 26ம் திகதி வாக்களிக்க முடியுமா என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் பார்வையாளர்களா? பங்காளிகளா?
• சில இடங்களில் பதிவு செய்யப்படாத கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரம் போஸ்டர்கள் கட்அவுட்களை அகற்றுமாறு கோரியும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இலங்கை , தேர்தல் , வன்முறைகள்
Copyright 2009
ROSHANIEE
Web Design
:Ray Creations. Sponsored by
Web Hosting India and
Ray Hosting. The Blog Full of Games.