Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறையில் பார்த்தால் எல்லாமே தலைகீழ்தான்.

தேவையில்லாத கதை ஏன் முதலில் பிரச்சினையின் வேரைத்தேடுவோம்.முதலில் காதல் திருமணத்தைப்பற்றி கதைப்பதற்கு முன் பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணம் பற்றிப் பார்போம். இந்துசமய முறைப்படி திருமணம் செய்வதென்றால் முதலில் ஜாதகத்தைத்தான் முன்வைப்பார்கள்.அதில் காணப்படும் அனைத்துப் பொருத்தங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பார்ப்பார்கள். சின்னப் பிழை இருந்தாலோ அல்லது பொருத்தம் 75வீதத்துக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலோ உடனே அந்த சம்மந்தத்தை மறுத்துவிடுவார்கள். ஏன் என்று காரணம் கேட்டால் அது பிறகு குடும்பத்தில பிரச்சினையை கொண்டு வரும் அப்படி இப்படி என்றெல்லாம் பல காரணங்களைப் போட்டு சில நல்ல விடயங்களை இழந்து விடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் ஜாதகங்கள் எதையும் தீர்மானித்ததாக தெரியவில்லை அவர்களுடைய நடத்தைகள் தான் தீர்மானிப்பதாக தெரிகின்றது.சிங்களவர்களும் ஜதகத்தை முன்னிலைப்படுத்துவது உண்டு. கிறிஸ்தவர்களும் முஸ்ஸிம்களும் ஜதகத்தை விட்டு குடும்ப பின்னணியையும் பழக்க வழக்கங்களையும் தான் பார்ப்பது வழமை.(பொது நடைமுறை) இந்த அடிப்படையில் தான் திருமணங்கள் நடக்கின்றன.

பிரச்சினை என்று வரும் போது அது எல்லோருக்கும் பொதுவாகவே அமைகின்றது. வீட்டுக்கு வீடு வாசல் படி போல பிரச்சினை ஒவ்வொரு வீட்டிலும் வௌ;வேறு வடிவத்தில் வேர் கொள்கிறது. பிரச்சினைக்கான அடிப்படை மூலத்தைக் கண்டறிய வேண்டும். இங்கு பிரச்சினையோ முறண்கருத்தோ ஜாதகத்தில் இருந்து வரவில்லை. மனங்களில் இருந்து தான் எழுகிறது. பெரியோர்கள் ஆரம்பத்தில் பொருளையும் வடிவையும் தான் பார்த்தார்கள். ஒருவரும் உண்மையான மனத்தையும் குணத்தையும் தேடிப்பார்ப்பதில்லை. (அப்படித் தேடத்தொடங்கினால் போச்சு யாருமே வாழ்கையில கல்யாணத்தை நினைச்சே பார்க்கேலாது.) ஒரு வகையில் இது 100 வீதம் சாத்தியம் ஆகாது. ஆனால் குறைந்தது அரைவாசியாவது தேடி அறிய முடியும். அவசர உலக்திலே வாழும் எங்களுக்கு கருத்துக் கணிப்பெடுக்க நேரமில்லை. அதனால் தானோ தெரியவில்லை எல்லாத்தையும் அவசர அவசரமாகச் செய்து பாதி வயதைக் கடக்க முதல் வாழ்கையைத் தெருவிலே தொலைத்து விட்டு ஏங்குகிறோமோ தெரியவில்லை.

குடும்பம் என்றால் பிரச்சினை இருப்பது வழமை. இல்லாவிட்டால் அது குடும்பமில்லை. இங்கு பிரச்சினையை ஊதிப் பெருப்பிப்பது தான் இன்னொரு பிரச்சினை. இப்போது அதுக்குத்தான் தீர்வு வேண்டும். அடுத்த பிரச்சினை சொந்தப் புத்தியில் குடும்பம் நடத்தாமல் மாமா ,மாமி, மச்சாள், அக்கா என்று கூட இருப்பவர்களின் முதுகில் தங்கள் குடும்பத்தைத் தூக்கி வைப்பது. அடுத்தது விட்டுக் கொடுக்காத மனப்பான்மை. அது எதையும் ஆட்டிப் படைக்க வல்லது. இறுதி விடயம் சந்தேகம். இது ஒரு துளி நஞ்சு போன்றது. ஒரு குடம் பாலை அப்படியே முழுங்கிவிடும்.

இவற்றை அகற்றுவதற்று முதலில் இருவரும் மனம் விட்டு பேச வேண்டும். அடுத்தது தனது வருமாத்துக்கு ஏற்றவாறு குடும்ப வண்டியை ஓட்டப் பழக வேண்டும். பிறர் ஆலோசனையைக் கேட்க வேண்டுமே ஒழிய அதன் படி நடக்க முற்படக் கூடாது. மிக முக்கிமான விடயம் எல்லாப்பிரச்சினையையும் தீர்க்க நல்ல மருந்து ஆகக்குறைந்தது இரவு வேளைச் சாப்பாட்டையாவது எல்லோரும் கூடி ஒரே மேசையில் உண்ண வேண்டும். இப்படி அண்மித்து முகங்களை சந்திக்கும் போதே பாதி பிரச்சினையோ மனப்பாரமோ குறைந்து விடுகிறது.

அடுத்து வெளிநாட்டு திருமணங்களில் சந்திக்கின்றேன்……

காதலிப்பவர்களில் சிலருக்கு ஒரு கொள்கை இருக்கின்றது 'தங்கள் காதலை காதலர் தினத்தன்று தெரியப்படுத்துவது" எண்டு. இது ஒரு வேண்டாத வேலை ... ஒருவனோ அல்லது ஒருத்தியோ இன்னொருவரை காதலிக்கும் போது அதனை வெளிப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் காதல் நிறைவேறாத சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, இதை தான் சொல்வார்கள் "காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன கதை" எண்டு.

காதலர் தினத்தின் பின்னரான நாட்களில் தமிழகத்தில் சில வேண்டத்தகாத உயிர் கொலை , தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன, யாழ்பாணத்தியும் ஒரு சம்பவம் நடந்ததாக கேள்விப்பட்டேன். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! தற்கொலை என்பது இயலாதவன் முடிவு. தன் காதல் நிறைவேறவில்லை என்பதற்காக கொலை செய்பவனை என்னவென்று சொல்வது. இனி சம்பவங்களை பார்ப்போம்.

காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஷர்மிலி ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தாரர். இவரை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஒரு கட்டத்தில் ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த சான்றிதழை ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், பயந்து போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், ஷாஜனை உதறிய ஷர்மிலி தாயிடம் தனக்கு வேறு வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார். அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

காதல் தோல்வியால் மனமுடைந்த கல்லூரி விரிவுரையாளர், கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சண்முகவர்த்தினி(26), ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். மாலை நேரத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். மகளது காதலுக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சண்முகவர்த்தினியை காலையிலும், மாலையிலும் பெற்றோர் பின்தொடர்ந்து வந்து கண்காணித்ததாக கூறப்படுகிறது. சண்முகவர்த்தினி தினசரி பொறியியல் கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு வந்து செல்வார்.நேற்று காலை 9:30 மணிக்கு சண்முகவர்த்தினி கல்லூரிக்கு வந்தார். சிறிது நேரத்தில் திடீரென கல்லூரியின் ஐந்தாவது மாடிக்கு சென்ற சண்முகவர்த்தினி, மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கல்லூரி துணை முதல்வர் ராமமூர்த்தி, கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சண்முகவர்த்தினியை தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு டாக்டர்கள், சண்முகவர்த்தினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.சண்முகவர்த்தினி, ஜெகன் என்பவரை காதலித்து வந்ததாகவும், இதை பெற்றோர் கண்டித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று சண்முகவர்த்தியிடம் ஜெகன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்தே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). இவர் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்தார். கடந்த ஒரு வருடமாக பின்னாலேயே சுற்றியுள்ளார். ஆனால் அவரது காதலை ரேவதி ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார். நேற்று காலை ரேவதி கல்லூரிக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரானேஷ், மாணவி ரேவதியின் வலது காதை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காது அறுந்து ரத்தம் கொட்டியதால் ரேவதி அலறினார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அறுந்து போன காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் இறங்கியுள்ளனர்.

மூன்று சம்பவங்களும் எப்படி இருக்கின்றது, ஒன்று கொலை, மற்றையது தற்கொலை, மூன்றாவது வன்முறை, இந்த மூன்றையும் காதல் எனலாமா?

Followers

About this blog

Labels