கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறையில் பார்த்தால் எல்லாமே தலைகீழ்தான்.

தேவையில்லாத கதை ஏன் முதலில் பிரச்சினையின் வேரைத்தேடுவோம்.முதலில் காதல் திருமணத்தைப்பற்றி கதைப்பதற்கு முன் பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணம் பற்றிப் பார்போம். இந்துசமய முறைப்படி திருமணம் செய்வதென்றால் முதலில் ஜாதகத்தைத்தான் முன்வைப்பார்கள்.அதில் காணப்படும் அனைத்துப் பொருத்தங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பார்ப்பார்கள். சின்னப் பிழை இருந்தாலோ அல்லது பொருத்தம் 75வீதத்துக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலோ உடனே அந்த சம்மந்தத்தை மறுத்துவிடுவார்கள். ஏன் என்று காரணம் கேட்டால் அது பிறகு குடும்பத்தில பிரச்சினையை கொண்டு வரும் அப்படி இப்படி என்றெல்லாம் பல காரணங்களைப் போட்டு சில நல்ல விடயங்களை இழந்து விடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் ஜாதகங்கள் எதையும் தீர்மானித்ததாக தெரியவில்லை அவர்களுடைய நடத்தைகள் தான் தீர்மானிப்பதாக தெரிகின்றது.சிங்களவர்களும் ஜதகத்தை முன்னிலைப்படுத்துவது உண்டு. கிறிஸ்தவர்களும் முஸ்ஸிம்களும் ஜதகத்தை விட்டு குடும்ப பின்னணியையும் பழக்க வழக்கங்களையும் தான் பார்ப்பது வழமை.(பொது நடைமுறை) இந்த அடிப்படையில் தான் திருமணங்கள் நடக்கின்றன.

பிரச்சினை என்று வரும் போது அது எல்லோருக்கும் பொதுவாகவே அமைகின்றது. வீட்டுக்கு வீடு வாசல் படி போல பிரச்சினை ஒவ்வொரு வீட்டிலும் வௌ;வேறு வடிவத்தில் வேர் கொள்கிறது. பிரச்சினைக்கான அடிப்படை மூலத்தைக் கண்டறிய வேண்டும். இங்கு பிரச்சினையோ முறண்கருத்தோ ஜாதகத்தில் இருந்து வரவில்லை. மனங்களில் இருந்து தான் எழுகிறது. பெரியோர்கள் ஆரம்பத்தில் பொருளையும் வடிவையும் தான் பார்த்தார்கள். ஒருவரும் உண்மையான மனத்தையும் குணத்தையும் தேடிப்பார்ப்பதில்லை. (அப்படித் தேடத்தொடங்கினால் போச்சு யாருமே வாழ்கையில கல்யாணத்தை நினைச்சே பார்க்கேலாது.) ஒரு வகையில் இது 100 வீதம் சாத்தியம் ஆகாது. ஆனால் குறைந்தது அரைவாசியாவது தேடி அறிய முடியும். அவசர உலக்திலே வாழும் எங்களுக்கு கருத்துக் கணிப்பெடுக்க நேரமில்லை. அதனால் தானோ தெரியவில்லை எல்லாத்தையும் அவசர அவசரமாகச் செய்து பாதி வயதைக் கடக்க முதல் வாழ்கையைத் தெருவிலே தொலைத்து விட்டு ஏங்குகிறோமோ தெரியவில்லை.

குடும்பம் என்றால் பிரச்சினை இருப்பது வழமை. இல்லாவிட்டால் அது குடும்பமில்லை. இங்கு பிரச்சினையை ஊதிப் பெருப்பிப்பது தான் இன்னொரு பிரச்சினை. இப்போது அதுக்குத்தான் தீர்வு வேண்டும். அடுத்த பிரச்சினை சொந்தப் புத்தியில் குடும்பம் நடத்தாமல் மாமா ,மாமி, மச்சாள், அக்கா என்று கூட இருப்பவர்களின் முதுகில் தங்கள் குடும்பத்தைத் தூக்கி வைப்பது. அடுத்தது விட்டுக் கொடுக்காத மனப்பான்மை. அது எதையும் ஆட்டிப் படைக்க வல்லது. இறுதி விடயம் சந்தேகம். இது ஒரு துளி நஞ்சு போன்றது. ஒரு குடம் பாலை அப்படியே முழுங்கிவிடும்.

இவற்றை அகற்றுவதற்று முதலில் இருவரும் மனம் விட்டு பேச வேண்டும். அடுத்தது தனது வருமாத்துக்கு ஏற்றவாறு குடும்ப வண்டியை ஓட்டப் பழக வேண்டும். பிறர் ஆலோசனையைக் கேட்க வேண்டுமே ஒழிய அதன் படி நடக்க முற்படக் கூடாது. மிக முக்கிமான விடயம் எல்லாப்பிரச்சினையையும் தீர்க்க நல்ல மருந்து ஆகக்குறைந்தது இரவு வேளைச் சாப்பாட்டையாவது எல்லோரும் கூடி ஒரே மேசையில் உண்ண வேண்டும். இப்படி அண்மித்து முகங்களை சந்திக்கும் போதே பாதி பிரச்சினையோ மனப்பாரமோ குறைந்து விடுகிறது.

அடுத்து வெளிநாட்டு திருமணங்களில் சந்திக்கின்றேன்……