இருக்கிறமின் 41 ஆவது இதழ் தீபாவளி சிறப்பிதழாக பல அம்சங்களை தாங்கி வந்திருக்கிறது...


இம்முறை சஞ்சிகையை அலங்கரிக்கும் ஆக்கங்களுக்கு சொந்தக்காரர்கள்
சந்திரிக்கா, கலாவர்சினி மலர்மகன் தங்கமயில் Dr .M.K முருகானந்தன் பாலா சங்குபிள்ளை மயில்வாகனம் சர்வானந்தா பஸ்லான் மொஹம்மட் சாந்தி தயா அந்நியன், ஷப்தமி மட்டிவில் ஞானக்குமரன் என் கணேசன் ஜனா யோகராசா சந்திரகுமார் சுரேஸ்குமார் C.K மயூரன் தேவகி கோபு A.R.V லோஷன் வாசு சிவனு மனோகரன்

பனி

பொழியும்

இரவில்

கூட

காரிருளையும்

குளிரையும்

தாண்டி

உனக்காக

ஒரு நட்சத்திரத்தை

எட்டத் துடிக்கின்றேன்


,iyAjph; fhyk; tUtJ

,aw;ifapYk; tho;f;ifapYk;

rf[k; - Mdhy;

mij kd cWjpapUe;jhy;

tre;jkhf;FtJ

,aw;ifapYk; tho;f;ifapYk;

rf[k; my;;y


vOj;Jf;fs; jtwpajhy;

nrhw;fs; jtwhdJ

nrhw;fs; jtuhdjhy;

thf;fpaq;fs; ,ilepd;wd

thf;fpaq;fs; ,ilepd;wjhy;

tupfs; jLkhwpd

tupfs; jLkhwpajhy;

ftpijapd; jiytpjp jiyfPohdJ

ftpijapd; jiytpjp jiyfPohdjhy;

vd; jiytpjp NeuhdJ


New;Wg;gbj;j gj;jpupif

goR

tUlq;fs; gy fle;Jk;

cd; fbjk; GjpJ



“என் எழுத்துக்கு வாழ்வு தந்தது இந்தக்களம் இன்றுவரை தெரியாமல் இருந்தேன்”, "வீட்ட போனதும் இதே வேலைதான்” இவையெல்லாம் வலைபதிவர் ஒன்று கூடலில் ஒலித்த குரல்கள். இவை ஏதோ ஒன்றை எதிர் பார்ப்பது போல் இருக்கின்றது. புதிய அனுபவமாக இருந்தாலும் எதிர்பார்ப்புகள் பலமாகவும் பலவிதமாகவும் இருந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வலைப்பதிவர் ஒன்றுகூடல் இடம் பெற்றது. இந்த நிகழ்வு இலங்கை வலைப்பதிவர்களுக்காக வரலாற்றிலே முதன் முறையாக நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். இந்த வலைப்பதிவின் ஊடாக ஒவ்வொரு தனி மனிதனும் தனது சுய கருத்தை எளிய முறையில் சுதந்திரமாகவும் வெளிப்படுத்துவதற்கு களம் அமைத்து கொடுக்கிறது. எழுத்து துறையில் ஆர்வமுள்ளவர்கட்கு இந்த வலைப்பதிவானது பல வழிகளில் உதவியாக உள்ளது. எவ்வாறு எனின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பிடிப்பது தொடர்பாடல் ஆகும். வலைப்பதிவின் ஊடாக திரையில் மறைந்திருந்து எழுதும் எத்தனையோ எழுத்தார்வமுள்ளவர்களை எழுத்துருவிலே இணைக்கும் பாலமாகவும் உள்ளது. இது அவர்கட்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.ஒவ்வொருத்தரும் தங்களுடைய கட்டுரைகள் கவிதைகள் பத்திரிகைகளில் வரவெண்டும் என ஆசைப்படுபவார்கள். ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அவ்வாறு நிராகரிக்கப் பட்டவர்களைக்கூட தன் பக்கம் ஈர்த்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த வலைப்பதிவானது ஆரம்பிக்கப்பட்டு கடந்த 23ஆம் திகதி 10வருடங்கள் நிறைவுற்ற நிலையிலும் எத்தனை பேருக்கு வலைப்பதிவு என்றால் என்ன என்பது தெரிந்திருப்பது கேள்விக்குறிதான். இலங்கையில் வலைப்பதிவின் தாக்கமானது மிகவும் அரிதாக உள்ளது.

வலைப்பதிவின் முக்கியத்துவம் துல்லியமாக எடுத்து கூறப்பட்டது ஒவ்வொருத்தரும் தங்களுக்கான வலைப்பதிவை எவ்வாறு பெற்றுக் கொள்வது தங்களுடைய பதிவுகளை எவ்வாறு இணைத்து கொள்வது என்பது தொடர்பாக சரியான விளக்கமளிக்கப்பட்டது. அதை விட முக்கியமானது புலமைச்சொத்து தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இதுதொடர்பான சட்டங்கள் அதாவது ஒருவருக்கு சொந்தமான ஆக்கங்களை அவரின் அனுமதி இல்லாது எடுத்து வலைப்பதிவுகளில் பதிவை மேற்கொள்ள முடியாது இது குற்றமாகும். வேறு எந்த இணையத்தளத்திலிருந்து பெற்ற தகவல்களைக் வெளியிட முடியாது.ஒருவருக்கு சொந்தமானதைத் தவிர வேறு எதையும் வெளியிட முடியாது. ஆக்க உரிமையாளரின் அனுமதிஃ சான்று பத்திரம் கிடைத்தால் மாத்திரம் வெளியிட முடியும். இது அழுத்திக் கூறப்பட்ட விளக்கங்களில் ஒன்றாகும்.

எதுவாக இருந்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கும் ஈடு கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. ஆகவே வலைப்பதிவுகளை மேற் கொள்பவர்கள் தங்களுடைய கடவுச் சீட்டுகள் மற்றும் இரகசிய குறியீடுகளை கவனமான முறையில் கையாள வேண்டிய கடப்பாடு உள்ளது. ஏனென்றால் ஆரம்ப காலங்களில் வலைப்பதிவானது அன்றாட நாட்குறிப்பேடு போலவே பேணப்பட்டு வந்தது.

அன்றாட வாழ்வில் கிடைக்கும் அனுபவங்களையே பகிர்ந்து கொண்டார்கள்.காலப் போக்கில் தொழில்நுட்ப மாற்றத்தால் ஆய்வுகள்இகட்டுரைகளை வலைப்பதிவில் எழுதினார்கள்.தொழில்நுட்ப வளர்
சியால் ஒருவருடைய ,ரகசியக்குறியீட்டைக் கூட களவாடக் கூடிய நிலைமை காணப்படுகிறது.இவ்வாறான சூழ்நிலைகளில் வலைப்பதிவர் விழிப்புடன் செயல்ப்பட வேண்டும் என விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது.இவ்வாறே ஒருவருடைய புலமைச் சொத்தை இன்னொருவருடையதாகஇலகுவாகமாற்றிவிடலாம். எல்லாம் கடந்துவந்த வலைப்பதிவானது எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முதலிடத்தை பிடிக்கிறது . எங்களுடைய எந்த செயல்பாடுகளிலும்; சினிமா பின்னிப் பிணைந்துள்ளது. சினிமா இல்லா விட்டால் அனைத்தும் ஸ்தம்பிதமாகும் நிலைகூட உருவாகலாம்.ஒரு தகவலை நாம் பரிமாறுவதன் நோக்கம் ஒன்று தகவலைப் வெளிப்படுத்துவதுடன் எமது மொழியையும் வளப்படுத்துகிறோம்.ஆனால் ஒருநோக்கம் தான் நிறைவேற்றப்படுகிறது.மொழியை வளப்படுத்தல் என்பது பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.

எமது எழுத்துத்துறை பேச்சு முறை அனைத்து நடவடிக்கைகளிலும் இந்திய கலாச்சாரமும் சினிமாவுத் ஒன்றியுள்ளது ,தனால்எல்லோரும் அதற்க்கு இயல்பாகவே ஈர்க்கப்பட்டு விடுகின்றார்கள் தமிழையே பல முறைகளில் எழுதுகிறாரகள்.
இந்திய சினிமாவை வைத்தே காலத்தை ஓட்டுமளவுக்கு அது எங்களை ஆக்கிரமித்துள்ளது.வெளிப்பாடே ஒவ்வெருத்தரின் வலைப்பதிவிலும் இ
ந்திய மொழி நடைதான் பின்பற்றப்படுகினறது . அது தமிழாக இருந்தாலும் சொற்க்கள் பிரயேகாத்தில் வேறுபாடு இருக்கின்றது .இதனால் விளங்கிக் கொள்வது கடினமாக உள்ளது இந்தப்பாணியை தவிர்ப்பது நல்லது.காரணம் எஙகள் மொழியை நாங்கள் பயன்படுத்த வேண்டும் எங்களின் கருத்தை மற்றவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும் அப்போது தான் உறவுகளை சுமூகமாகப் பேணமுடியும்.

வலைப்பதிவில் மற்றய ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளுடனான பதிவில்
இவ்வாறான பிரச்சினைகள் எழுவதில்லை காரணம் அவரகள் தங்களுக்குறிய பாணியையே பின்பற்றுகின்றார்கள்.இங்குவேறுபடுவதற்க்கு ஒன்றும் இல்லை ஊடகங்கள்கூட இந்திய முறையிலான எழுத்துப் பேச்சு முறைகளையே பின்பற்றுகின்றனர் நாம் எல்லோரும் அந்தப்பானியைப் பின்பற்றுவதற்க்கு ,துதான் காரணமாக அமைகின்றது எல்லா செயற்ப்பாடுகளும் சினிமாவையே மைய்யப்படுத்துகின்றது ,ல்லாவிடின் மக்களின் ஆர்வம் திசை திருப்பப்படுகின்றது ,தற்க்காகவே ,வ்வாறான யுக்திகளை பின்பற்றுகின்றார்கள் ,து மாற்றப்பட வேண்டும்.

ஒவ்வொரு வலைப்பதிவுகளும் தங்களை அறிமுகப்படுத்துவதற்க்கு எங்கள் சொந்த மொழியுடனான பாணியை பின்பற்றுவதுதான் மிகவும் நல்லது என இலங்கைப் பதிவர் ஒன்று கூடலில் அழுத்திக்கூறப்பட்டது. வலப்பதிவினூடாக சிறந்த படைப்புக்களை வெளிக்கொண்டுவருவதன்மூலம் சர்வதேச ரீதயில் நல்லதொரு அங்கிகாரத்தையும் பெறமுடியும் ‘கூகுல்’வலயமைப்பினூடாக வலைப்பதிவினை சிறப்பாக மேற்க்கொள்ளும்போது இதனிடமிருந்துவெளிநாட்டு அந்நிய செலாவனியையும் பெறக்கூடியவறு வாய்புக்களை ஏற்ப்படுத்திக் கொடுக்கின்றது .

சாதனைகள் பல வழிகளில் மேற்க்கொள்ளமுடியும் வலைப்பதிவினூடாக சாதிப்பபதற்க்கு நிறைய வாய்புக்களை ஏற்ப்படுத்தி தருகின்றது சாதிப்பதற்க்கு முன்னால் வலைப்பதிவினைப்பற்றிய அறிவினைக் கொண்டிருக்க வேண்டும்.

எல்லோரும் ஆங்கிலத்தில் மோகம் கொண்டிருப்பதால் தமிழினை சரியாகக் கவனிப்பது இல்லை வளர்ந்து வரும் சந்ததிகளுக்கு சரியான முறையில் தமிழைக் கற்ப்பதிலலை இதனால் அவர்கள் தமழ் செற்க்களை கூட ஆங்கிலத்தில் டைப் செய்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய சூழ் நலையும் காணப்படுகின்றது . இதனால் சொற்ப்பிழைகள் விடப்படுகின்றது இவ்வாறான செயற்ப்பாடுகளால் வலைப்பதிவின் தரமானது குறைவடைவதற்க்கும் சந்தர்ப்பமுள்ளது வலைப்பதிவு விமர்சிக்கப்படுவதற்க்கும் இதுவும் ஒரு காரணமாகும் .இதனை தவிப்பதற்க்கு வலைப்பதிவில் நுழைய விரும்பும் ஆர்வலர்கள் மிகவும் கவனமெடுத்து செயற்ப்பட வேண்டியுள்ளது .

குற்றத்தின் முடிவிடமாகவும் புதுவாழ்வின் ஆரம்ப நிலையமாகவும் , நிலையங்கள் வர்ணிக்கப்படுகின்றன. சட்டத்தை மீறுபவனும், தடுத்து , தண்டிக்கப்படுபவர்களும் ஒரே பார்வையில் கொண்டு நடாத்தப்படும் நிலையமாக சிறைச்சாலைகள் விளங்குகின்றன.ஒரு நாட்டில் நூலகம் ஒன்று திறக்கப்படும் போது சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என ஒரு கூற்றும் உள்ளது.அது எந்தளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்பது கேள்விக்குறி தான்.ஏனென்றால் நாட்டில் சிறைச்சாலைகளைக் கட்டுவதற்கே புதிய பதிய திட்டங்களை முன்வைக்கிறார்கள் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.குற்றம் செய்த நபர் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவதன் நோக்கம் அவன் திருந்தி இனிவரும் காலங்களில் குற்றங்களை செய்யாதிருப்பதற்காகவே.ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதே வருத்தத்திற்குரியது.

சிறு குற்றம் செய்ததற்காக உள் சென்றவன் அங்குள்ள பெரிய குற்றவாளிகளுடன் சேர்ந்து குற்றம் புரிந்தும் பிடிபடாத முறையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய புதிய தொழில்நுட்ப முறைகளைக் கற்று மிகப்பெரிய குற்றவாளியாக வெளிவருகின்றான்.இதுவே யதார்த்த உண்மையாகிறது.இதற்கு காரணம் தண்டனைகளுக்கேற்றமாதிரி சிறைச்சாலைகள் வடிவமைக்கப்படவில்லை.

சிறைச்சாலை என்றாலே எல்லோருக்கும் வித்தியாசமான எண்ணங்கள் தோன்றுவதுடன்ஒரு விதமான பய உணர்வும் காணப்படும்.அதை ஒதுக்கி விடப்பட்ட இடமாகவே கருதுகிறார்கள்.யாருக்கும் அங்கு செல்வதற்கு விருப்பமிருக்காது ஆனாலும் செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தால் போகத் தான் வேண்டும்.

ஓவ்வொருத்தரும் பல இடங்களைப் பற்றித் தினம் தினம் சிந்திக்கிறார்கள்.பல பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார்கள்.ஆனால் சிறைச்சாலைகள் பற்றி யோசிப்பதில்லை உண்மையில் அங்கு தான் சமூகப்பார்வைகளைத் திருப்ப வேண்டியள்ளது.ஏனென்றால் மனிதம் சீரழிக்கப்படுகின்றது.குற்றவாளிகளை சமூகம் தண்டிக்க முன் சட்டம் தண்டிக்கிறது.அவ்வாறிருக்கையில் திருந்தி வரும் குற்றவாளிகளை சமூகம் தண்டிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

ஆரம்ப காலங்களில் அரசியல் கைதிகளையும் போர்க்கைதிகளையும் தேசத்துரோகிகளையும் பத்திரிகையாளர்களையும் அடைத்து வைக்கும் இடமாகவே சிறைச்சாலைகள் இருந்தன.1935ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஜேர்மனியில் டேச்சு எனும் இடத்தில் “டேச்சு கைதிகள் சிறைச்சாலைகள்”முதன் முதலாக நிறுவப்பட்டது.ஹிட்லரின் ஆட்சியின் போது இச் சிறையில் கொடுமைகள் நடந்ததாக கூறப்படுகிறது.20லட்சம் கைதிகள் இறந்துள்ளதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.நகரத்துக்கு வெளியே அமைந்துள்ளதால் இந்த சிறைபற்றி ஜேர்மனியர்கள் அதிகளவு அறியவில்லை.இவ்விடத்தைப் அணுகவோ படம் எடுக்கவோ விமர்சிக்கவோ அனுமதியளிக்கவில்லை. பணி புரிபவர்கள் கூட எச்சரிக்கையுடன் தான் செயற்பட்டார்கள்.ஜேர்மனியை 1939ல் 2ம் உலக போரில் நேச நாடுகள் அணியினரால் வீழ்த்திய போது ஐக்கிய அமெரிக்கா இராணுவத்தினர் அவ்விடத்து கைதிகளை விடுவித்தனர்.ஹிட்லரின் மனித உரிமை மீறலுக்கு சான்றாக இச் சிறைச்சாலை விளங்குகின்றது.

இவ்வாறே சிறைச்சாலை முறை அனைத்து நாடுகளிலும் மெல்ல மெல்ல பரவத்தொடங்கியது.இதே காலப்பகுதியில் ஆங்கிலேயர் காலணித்துவ ஆட்சிக்குட்பட்ட இலங்கையிலும் சிறைச்சாலைகள் நிறுவப்பட்டன.இலங்கையில் முதன் முறையாக வெலிகடையில் 1841ம் ஆண்டு சாதாரண விசாரணை நிலையமாக இருந்து காலப் போக்கில் உயர் பாதுகாப்பான சிறைச்சாலையாக நிறுவப்பட்டது.அடுத்து மஹரவில் 1875ம் ஆண்டு நிறுவப்பட்டது.முக்கியமானதில் இறுதியானது கண்டியில் போகம்பார எனும் இடத்தில் 1876ம்ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கையில் சிறைச்சாலை என்பது முக்கியமான தொன்றாகிறது.காரணம் அனைவருக்கும் தெரிந்ததே…… இலங்கையில் மொத்தமாக 31653கைதிகள் உள்ளனர்.ஆனால் நாட்டில் உள்ள அனைத்;துச் சிறைச்சாலைகளிலும் 10ஆயிரம் கைதிகளையே தங்கவைக்கும் வசதி உள்ளது.தற்போது மூன்று மடங்கு கைதிகளைப் பராமரிக்கிறார்கள்.இதனால் இயல்பாகவே பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.போதைப் பொருள் மது உள்ளிட்ட குற்றச்சாட்டு உடையவர்கள் 37% போதைப்பொருள் பாவனை காரணமாக இடம் பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் 60% அதாவது , கொள்ளை இவ்வகையான குற்றங்களாலே சிறையில் அடைக்கப்படுகின்றனர்.அதை விட 15000ற்கு மேற்பட்டோர் விளக்கமறியலில் உள்ளனர்.

அவர்களை விட இராணுவத்தில் இருந்து தப்பி இராணுவ நீதிமன்றம் ஊடாக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர்கள் 1506 கைதிகள்.இவர்களுக்காக நான்கு சிறைச்சாலைகள் உள்ளது.அதாவது பல்லேகல , கொழும்பு மற்றும் தெற்கிலும் நிறுவப்பட்டுள்ளது.தற்போது பல்லேகல மற்றும் வாரியபொல பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்றன.


இந்தச் சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கு அரசு தினமும் ஒருவருக்கு 250 ரூபா செலவிடுகின்றது. ஆத்துடன் குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்களும் கைதிகளாக உள்ளனர். ஒரு சிறைச்சாலைக்கு ஐவர் வீதம் குழந்தைகளுடன் உள்ளனர். அவர்களுக்காக விசேட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் அபிவிருத்தி பாதிக்கப்படுவதுடன் குற்றச்செயல்களும் அதிகரிக்கின்றது. காரணம் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரிக்கும். வழக்குகளும் துரிதமாக மேற்கொள்ளாமல் தேங்கியே கிடக்கிறது. இதனால் மனித வளங்களும் வீணடிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஒருபுறம் இருக்க மறுபுறம் சிறைக்கு போனவர்கள் சடலங்களாக வெளிவருகின்றார்கள். இந்த மரணங்கள் நிகழ்வது அனைவரையும் திகைப்படையச் செய்கின்றது. 2000 ஆண்டிலிருந்து 2009 ஜுலை 13ஆம் திகதி வரை 1213 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர். என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.30 கைதிகள் உட்பட 2009ம் ஆண்டு 8 பேர் தப்பி ஓடும் போது மரணமடைந்துள்ளனர்.
2000ம் ஆண்டு 75 பேர்
2001ம் ஆண்டு 83 பேர்
2002ம் ஆண்டு 122 பேர்
2003ம் ஆண்டு 95 பேர்
2004ம் ஆண்டு 139 பேர்
2005ம் ஆண்டு 145 பேர்
2006ம் ஆண்டு 141 பேர்
2007ம் ஆண்டு 157 பேர்
2009ம் ஆண்டு 85 பேர்

குற்றங்களுக்காக அடைத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் வேறு காரணங்களுக்காக மரணமடைவது சரியான செயற்பாடு அல்ல இதற்காக சட்டமானது தன்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமே தவிர குற்றம் செய்தவர்களை புனர்வாழ்வு அழிக்கும் இடத்தை மரணங்கள் மலிந்த இடமாக மாற்றக்கூடாது. இவற்றை தவிர்க்க சரியான முறையில் சிறைச்சாலைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இல்லையேல் குற்றவாளிகள் கூட சிறைச்சாலைகளை பொருட்படுத்த மாட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகளாளேயே சிறைச்சாலைகளின் எண்ணக்கரு சிதைவடைந்து விமர்சனத்திற்கு உள்ளாகின்றது.


தொடா்மாடிகள்

“வருடப்பிறப்பண்டைக்கு நான் போய் எங்கள் வீட்டு ‘பல்கனி’யில் நிண்டு மாமா வாறாரா எண்டு பார்த்துக் கொண்டிருந்தன். ‘டங்’ எண்டு றால் கோது கட்டின சொப்பின்பாக் எனக்கு கிட்ட வந்து விழுந்தது. அண்ணாந்து பார்த்தன் மேல் மாடியில் இருந்து கீழே உள்ள குப்பைத் தொட்டிக்கு எறிஞ்ச றால்கோது பாக் தான் அது. இப்பிடி யாரும் செய்வினமோ…. கீழ இறங்கிப் போய் போட்டால் என்ன….” அலுத்துக் கொண்டார் வெள்ளவத்தையில் தொடர்மாடி வீட்டில் 5 வருடமாக வாழும் ரஞ்சி (வயது 30)
“ஊரில கதவையும் திறந்திட்டு றோடியோவையும் கூட்டி வைச்சிட்டு முத்தத்தில நிண்டு பாட்டு கேக்கிற மாதிரி இங்கையும் செய்யுதுகள். ரி.வி யின்ற சத்தத்தையும் கூட்டி வைச்சுக்கொண்டு கதவையும் திறந்து விடுதுகள். எரிச்சலா இருக்கும். என்ன செய்யுறது?” என்று எரிச்சலானார் வேறு ஒரு தொடர்மாடியில் வசிக்கும் கணேஷ்.

இன்று விரும்பியோ விரும்பாமலோ எம்மில் பலர் தொடர்மாடி வாசிகளாகிவிட்டோம். பெரிய முற்றத்துடன் நிலத்துடன் அமைந்த வீட்டில் சாமியறை, சாப்பாட்டறை, குசினி, முன்விறாந்தை, பின்விறாந்தை, படுக்கையறை, படிக்கும் அறை என ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அறை என வாழ்ந்த மக்களில் பலர் இன்று 2 அல்லது 3 அறைகளுடன் தொடர்மாடி வீடுகளில் வசிக்கத் தொடங்கி விட்டார்கள்.
தொடர்மாடி வீடுகளில் சட்டப்பிரச்சினை, நீர் பிரச்சினை, இடப்பிரச்சினை… இப்படி பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க தொடர் மாடி வீடுகளில் வாழ்பவர்கள் தமக்குத் தாமே பல பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

காலி வீதியில் இருந்து சற்று உள்ளே அமைந்திருந்த அந்த தொடர்மாடி 6 அடுக்குகளை கொண்டது. அந்த வீட்டில் இருப்பவர்கள் அணியும் ஆடைகள் கலர் கலராக வீட்டு ‘பல்கனி’யில் தொங்கிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் மறுபுறம் அந்த தொடர் மாடியை அலங்கோலமாக்குவதாக இருந்தது. சில வேளைகளில் தவிர்க்க முடியாததாக இருந்தாலும் அதற்கான மாற்று வழியை கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. அதற்காக குடியிருப்பாளர் எல்லோரும் சேர்ந்து மொட்டை மாடியில் அதற்கான ஒழுங்குகளை மேற் கொள்ளலாம்.
“விடிய எழும்பினால் வாசல் படியை கழுவ வேண்டி இருக்கிறது” என்றார் ராஜி (ஆசிரியர்) இவற்றுக்கெல்லாம் காரணமாவது முதலில் எப்படி தொடர்மாடிகளில் வாழ்வது என்று தெரியாமல் வாழ்வது தான். அதைத்தான் ‘குயின்ஸ்கோட்’ சிவகாமி (ஆசிரியர்) சொல்கிறார். “காசைக் கொட்டி வீட்டை வாங்கினால் காணாது. அதில் எப்படி வாழ்வது என்று கூடத் தெரிய வேண்டும். ஊரில் வாழும் போது எமது இஸ்டப்படி வாழலாம். காரணம் பெரிய காணி, வளவு கேட்பதற்கு யாரும் இல்லை” இவ்வாறு எத்தனையோ உள்ளங்கள் வெந்து கொண்டிருக்கின்றன.
இதே மாதிரித்தான் வெளிநாடுகளிலும் இதைவிட இரண்டு மடங்கு அதிகரித்த முறையில் தொடர்மாடி வீடுகள் காணப்படுகின்றன. அவர்கள் எவ்வளவோ சிக்;கல்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தும் தமது வீடுகளைப் பராமரிப்பதிலும் அதில் வாழ்வதிலும் மிகவும் அவதானமாக இருக்கிறார்கள். அங்கு சிறிய சத்தம் அல்லது அயல் வீட்டுக்காரரினால் பிரச்சினை வந்தால் உடனே அந்த வீட்டுக்காரர்கள் பொலிஸிற்கு அறிவித்து விடுவார்கள். அங்கு அப்படியான சூழ்நிலையிலும் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதை இங்கே ஒப்பிட முடியாது. இருந்தாலும் தொடர் மாடி எனும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகளைக் கவனித்துத் தான் ஆகவேண்டும்.

தொடர்மாடிகள் எனும் போது இரண்டு வகையானதாகக் காணப்படுகின்றது. ஆடம்பர வசதிகளைக் கொண்டது மற்றது சாதாரணமானது. ஒவ்வொரு மாடிவீடுகளும் தமக்கென சில கட்டுப்பாட்டு விதி முறைகளைக் கொண்டுள்ளது.

இந்த விதிமுறைகளை ஒவ்வொருத்தரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. அயலவர்களின் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடாது பார்த்துக்கொள்கிறது. அந்தந்தக் குடியிருப்புக்களில் உள்ளவர்கள் அங்கத்தவர்களாக இணைந்து அந்த விதிமுறைகள் தொடர்பாக மேற்பார்வை செய்கின்றனர். எவ்வாறான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதென்றால் வீட்டுக்கு வெளியே எந்தவிதமான பொருட்களையோ அல்லது பூச்சாடிகளையோ வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் வீடுகளில் வசிப்பதால் செல்லப்பிராணிகளை வளர்க்க முடியாது. இது தொடர்பாக 5 வயதுப் பிள்ளையின் தாயான சுகன்யா இவ்வாறு கூறுகிறார். “ஊரில ஓடித்திரிந்து விளையாடின பிள்ளைகள் இங்க ஆசைக்கு சைக்கிள் கூட ஓட முடியவில்லை”. சில மாடிகளில் சிறுவர்கள் வாகனத் தரிப்பிடத்திலோ அல்லது வேறு இடத்திலோ விளையாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

இது மற்றையவருக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காக போடப்பட்ட விதி. பள்ளிக் கூடத்தால் வந்தால் அம்மா வெளியே போகவே விடுறா இல்ல” என்று பிஞ்சுக் குழந்தையான துஸ்மிகா (வயது 5) ஏங்குகிறது. இவ்வாறு தொடர் மாடிகளில் பிரச்சினை காணப்படும் போது அதற்கான மாற்று வழிகளை அவர்களே தான் கண்டுபிடிக்க வேண்டும். சிறுவர்கள் விளையாடுவது தவிர்க்க முடியாத ஒன்று இந்தப் பிரச்சினையை சிறுவர் பக்கமிருந்து சிந்திக்க வேண்டும். எமக்கு பிரச்சினையானது அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

“மாதம் மாதம் ‘பைப்’ எல்லாவற்றையும் ‘கிளீன்’ பண்ண வேண்டியிருக்குது. மேல் வீட்டில் உள்ளவை கண்டபடி எல்லாத்தையும் எங்கெங்க போடுறது என்று தெரியாமல் பாவிக்கிறதால் பெரிய பிரச்சினை. திடீர் திடீரென எல்லாம் அடைத்து விடுகின்றது” வேதனையுடன் சொன்னார் அந்தத் தொடர் மாடிக்குடியிருப்பின் மேற்பார்வையாளர் சுப்பிரமணியம். எல்லோரும் நேரத்தை கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியுள்ளது. ஆகவே அவசரத்தில் எல்லாக் கழிவுகளையும் உதாரணமாக தலைமயிரை கழிவுநீர் குழாயில் போடுவது. ஏற்கனவே அதற்காக குளியலறை குழாய் மட்டும் இதற்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர் மாடிகளில் வசிப்பவர்கள் பலருக்கு இது பற்றித் தெரியாது. சமையலில் மீதி உணவை எடுத்துவிட்டு பாத்திரங்களைக் கழுவாமல் அப்படியே கொட்டி விட்டு கழுவுவதனால் அவை சென்று குழாய்களில் தங்கி அடைத்து விடுகிறது. அதிகம் தொடர் மாடிகளில் இந்தப்பிரச்சினை காணக்கூடியதாக உள்ளது.

மாதம் மாதம் சாமான் விலையேர்றதை விட ‘பிளட்ஸ்’ பராமரிப்பு செலவிற்கு காசு கூடிக் கொண்டே போகுது” என்று புலம்புகிறார் நடுத்தரவ வர்க்கத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி. இதற்கு காரணம் என்னவென்றால் ‘பல்கனி’ சுவர்களில் பூங்கன்றுகளை வைத்துப் பராமரிப்பதால் அதிலிருந்து வடியும் நீர், கசியும் மண்காரணமாக வெளிப்புற சுவர்களில் காவி படிகிறது. இதற்கு ஒவ்வொரு குடியிருப்பாளரும் பொறுப்பாளிகளாகின்றனர். ஊரில் பூக்கன்றுக்கு நீர் ஊற்றுவது போல் அல்ல. அவர்கள் அதற்காக வேறு இடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அல்லது நீர் வெளியே கசியாதபடி சாடிகளை பாதுகாப்பாக பேண வேண்டும்.

தமக்கான பிரச்சினைகளையும் செலவீனங்களையும் தாமே உருவாக்கிக் கொள்கின்றனர். இவர்களின் பிரச்சினை அயலவர்களுக்க பெரும் பிரச்சினையை தோற்றுவிக்கிறது. இவற்றிற்கான அடித்தள காரணம் இயல்பாக ஒன்றிப் போன பழக்க வழக்கங்கள் தான். நாங்கள் தான் நிலைமைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளவேண்டும்.

எல்லோரும் தொடர்மாடிகளின் பிரச்சினை பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் வசிப்பவர்கள் கொண்டுள்ள ஒழுங்கு முறை தெரியாதபடியால் தான் தொடர் மாடி வீடுகளில் வசிப்பது கஸ்டம் அல்லது சிக்கலாக உள்ளது என தேவையில்லாமல் அலட்டிக் கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால் வெளிநாடுகளில் 95 வீதமானவர்கள் தொடர் மாடிகளில் தான். அவர்கள் அப்படிச் சொன்னார்களா? இல்லை. நாம் தொடர் மாடிகளில் வாழ்கின்றோம் ஆனால் ஊரில் வசிப்பது போல் செயற்படுகின்றோம். எமக்கானது ஒழுங்கு விதிகள் அவை எம்மைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. எமக்கு சிக்கல் வராமல் தடுப்பதற்காகவே இந்த விதிகள் விதிக்கப்படுகிறது. கட்டாயம் இவற்றைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

பிரச்சினையை நாம் தான் விலை கொடுத்து வாங்குகின்றோம். விதிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டால் நாங்கள் நாளடைவில் அதற்குட்பட்டு பழக்கப்படுவோம். பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளதை பிரச்சினையாகக் கொள்ளாமல் எமக்கானது எனக் கொண்டோமானால் தொடர் மாடி வீடுகளில் வாழ்வது சுலபமானது ஒன்றாகக் கூட பழக்கமாகிவிடும். பழக்கங்களில் தான் உள்ளது பிரச்சினைகளும் தீர்வுகளும்.


சூரிய காந்தி பூக்கள்லீவு கிடைச்சாலும் எங்கு போவது என்று தெரியாது எத்தனையோ உள்ளங்கள் நான்கு சுவர்களுக்குள் மண்டையை போட்டு உடைத்துக் கொள்வது எங்களுக்குத் தெரியும் என்ன செய்வது என்று கூட நேரத்தைத் திட்டிக்கொண்டிருப்பார்கள். எத்தனை தரம் தான் ‘மியூசியம், பார்க், சூ’ என்று சுத்துவது. அவற்றை எல்லாம் விட வித்தியாசமான ஒரு இடம், புதிய பார்வைக்கோணங்களை உருவாக்க கூடியதும் புதிய உலகப் பிரவேசம் போல உணரக் கூடியதுமாக உள்ள ஒரு தாவரவியற் கண்காட்சி

அண்மையில் விகாரமகா தேவிப்பூங்காவில் 4 நாட்கள் நடைபெற்றது. கொழும்பு நகரத்தில் இப்படியான ஒரு கண்காட்சி பலரின் வரவேற்பை பெற்றிருந்தது என்பதை அங்கு வருகை தந்தோரின் எண்ணிக்கையை பார்த்தபோதே கணக்கிடக் கூடியதாக இருந்தது. ஒரே மாதிரியான நிகழ்வுகள் இடம் பெறுவதைவிட இவ்வாறான செயற்பாடுகள் நகரமத்தியில் இடம்பெறுவதால் பல பூங்கன்று பிரியர்களுக்கு நன்மையளிப்பதுடன் அந்த இடத்தை இடத்தை ஒரு தடவை சுற்றிப்பார்த்தாலே ஒரு ஆத்ம திருப்தி போல் இருக்கிறது. ஆனால் ஒரு அதிசயம் கொழும்பு நகருக்குள் வசிக்கும் பலருக்கு இவ்வாறு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் வெளியிடங்களில் இருந்து அநேகமானோர் வந்திருந்தார்கள். பல பூங்கன்றுகளை காணும்போது ஏதோ எண்ணங்கள் மனதைச் சூழ்கையில் வலிகள் கூட மெல்ல விலகுவது போன்று ஓர் உள்ளுர உணர்வு.

 பதோக்சாக்க கள்ளி வகைபச்சை நிற வண்டுகள் சாடிக்குள் நிற்பது போல இருந்து பலபேரின் பார்வையைத் தன்பக்கம் உள்வாங்கிக் கொண்டிருந்தது. ‘பதொக் சாக்க’. இது என்ன புதுவிதமான பெயருடன் புதினமாகவும் இருந்ததால் அவ்விடத்தை சுற்றி ஒரே கூட்டமாக இருந்தது. பச்சை நிறத்தண்டை உருண்டை வடிவில் கொண்டதுடன் அதன்மேல் அடர்த்தியான மஞ்சள் உரோமங்களையும் கொண்டு அசல் வண்டுகள் மயிர்கொட்டி போல் காட்சியளித்தது. இத்தாவரமானது களுத்துறையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றது. இது கள்ளி வகைத்தாவரம் இதற்கு நீர் தேவையில்லை. இப்படியான எத்தனையோ தாவரப்புதுமைகளை அறிமுகப்படுத்துகிறது ‘ LANKA MAL’ கண்காட்சி. 15 வருடங்களுக்கு மேலாக சுதர்சி ஹோல், BMICH போன்ற இடங்களில் இடம்பெற்று வந்து 10 வருடங்களாக விகாரமகாதேவிப் பூங்காவில் இடம்பெற்று வருகின்றது. இக்கண்காட்சி கடந்த மாதம் 10,11 மற்றும் 12ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இதற்கான வரவேற்பு பூங்கன்று ரசிகர்கள் மத்தியில் பலமாகத் தான் இருந்தது.

ஆா்வமாக வாங்குவோர்வென்னப்புவ, பூகொட, களுத்துறை, நீர்கொழும்பு, நவரெலியா போன்ற பிரதேசங்களில் இருந்து ஏறக்குறைய 80 விற்பனையாளர்கள் இந்தக்கண்காட்சிக்கு பங்குபற்றி இருந்தார்கள். இவர்களில் 75 சதவீதமானோரின் பிரதான தொழிலாக பூங்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்வதாக இருக்கிறது. கேட்கவே ஆச்சரியமாக இருந்து. இன்று விலைவாசிகளின் ஏற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இருக்கையில் பூங்கன்று வியாபாரம் எப்படி வருமானத்தை ஈட்டப்போகிறது. இது தொடர்பாக கண்காட்சியில் பங்கு பற்றிய விற்பனையாளர் ஜெயபிரதாவை கேட்டபோது “நான் நீண்ட காலமாக இத்தொழிலை செய்து வருகின்றேன். எனது வாழ்வாதார தொழிலாக இருப்பதுடன் ஒழுங்கமைப்பாளரின் இவ்வாறான கண்காட்சி விற்பனை ஊடாக அதிக இலாபத்தை பெற்றுக் கொள்ள முடிகின்றது என்றார். விற்பனை செய்யும் பூங்கன்றுகளுக்கு எந்த விதமான இரசாயனப்பதார்த்தங்களும் பாவிப்பதில்லை, இயற்கையான பசளைகளுடனே வளர்க்கின்றேன்” என திடமாகக் கூறினார்.

இந்த தாவரக் கண்காட்சியை 6 ஒழுங்கமைப்புக் குழுக்கள் சுழற்சி முறையில் நடாத்துகின்றன. ஆறுமாதத்திற்கு ஒருதடவை இக்குழுக்கள் கூடி ஆலோசனை செய்த பின்னர் ஒரு குழு இக்கண்காட்சியை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும். இது தொடர்பாக நடைபெற்று முடிந்த கண்காட்சி ஒருங்கமைப்பாளர் சந்தனவிடம் (வயது 34) கேட்ட போது “ கண்காட்சி நடத்தும் இடமானது மாநகரசபைக்கு சொந்தமானபடியால் அவர்களுக்கு 30000 ரூபா கணக்கில் வைப்பிலிட வேண்டும். இத்தொகை ஆறு மாதத்திற்கு பின்னர் மீளளிக்கப்படும். வாடகையாக 108330 ரூபா கொடுக்க வேண்டும். இந்நிகழ்வானது 4 நாட்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. வியாழன் 10.30 இலிருந்து ஞாயிறு இரவு 12 மணிவரை இடம்பெறும். விளம்பரங்கள் மும்மொழி ஊடகங்கள் மூலமும் சுவரொட்டிகள் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாது 2000 பேருக்கு தபால் மூலம் தனிப்பட்ட அழைப்பும் விடுக்கப்பட்டது.

ஓவ்வொரு விற்பனையாளருக்கும் 10 ஒ 15 அளவில் இடம் வழங்கப்படுகிறது. அதற்கு 4000 ரூபா அறவிடப்படுகின்றது. அவர்களுக்கான கொட்டகை, நீர்வசதி, மின்சார வசதி இலகுவாக வழங்கப்படுகின்றது. இதனால் இவர்கள் 4 நாட்களும் இலகுவாக பூங்கன்றுகளை பராமரிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் இவ்வாறான கண்காட்சி நடாத்தப்படும் போது 700 முதல் 1000 பேர் தான் மொத்தம் 4 நாட்களில் கண்காட்சியை பார்;க்க வருவார்கள். ஆனால் இன்றைய காலப்பகுதியில் ஒரு நாளைக்கே 1000 பேர் வருகிறார்கள். மகிழ்ச்சியாக இருப்பதுடன் பிரயோசனமான நிகழ்வாகவும் இக்கண்காட்சி இருப்பதாகத் தெரிகிறது. செவ்வரத்தை, மல்லிகை, றோசா போன்ற பூச்செடிகளை அதிகம் யாழ்ப்பாணத்தவர்களே விரும்பி வாங்குகின்றனர். அதற்கான கேள்வியும் கூடுதலாக காணப்பட்டது. இந்த வகையான பூங்கன்றுகள் நுவரெலியாவிலிருந்து தான் கொண்டுவரப்படுகின்றன. சமாதான காலங்களில் வடக்கிலிருந்தும் வித்தியாசமான பூங்கன்றுகள் இங்கு கொண்டு வரப்பட்டன” என்றார்.

சந்தன கட்டானவில் வசிக்கின்றார். தன் தாயார் 5 பேர்ச்சில் இந்தத் தொழிலை மேற்கொண்டுவந்த காலத்தில் தனக்கு 24 வயது இருக்கும் பொழுதே இத்தொழிலை பழகி தற்பொழுது 3 பரப்பில் பெரிய பூந்தோட்டத்தை செய்து வருவதாக தன்னைப்பற்றிய சிறிய அறிமுகத்தை செய்தார்.

பலவகையான கொய்யா, தோடை, பாக்கு, நீர்ச்சட்டிகளில் தாமரை மற்றும் அல்லி என்பவையும் பல வர்ணங்களில் பூங்கொத்துக்களும் பூங்கன்றுகளும் விற்பனைக்காக விழித்திருந்தன. அதுமட்டுமல்லாது மரக்கறி விதைகளும் கன்றுகள் நாற்றுக்களும் வைக்கப்பட்டிருந்தன.

பூங்கன்றுகளை வாங்கி வைத்தால் மட்டும் போதாது. அவற்றை பராமரிப்பது அதைவிட முக்கியமானதொன்றாகும். அதற்காகவே கண்காட்சியின் ஒருபகுதியில் இதற்கான உபகரணங்கள், மருந்துவகைகள், கிருமிநாசினிகள் போன்றன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பல வகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சாடிகளும் காணப்பட்டன. பல வகைத்தாவரங்களில் மனம் தாவிக்கொண்டிருந்தாலும் ஒரு நாள் நாணியாக உலகை ஆளும் பூக்களை இரசித்ததும் பார்த்ததும் மனதுக்கு சந்தோசமாகத் தான் இருந்தது. பூங்கன்றுகளின் விலைகளும் கைகளில் உள்ள பணத்தை சுரண்டவில்லை. விரலுக்கேத்த வீக்கமாக இருந்தது.

ஒருதுண்டு நிலம் கூட வாங்க முடியாத கொழும்பில் பூங்கன்று வியாபாரம் அமோகமாக நடைபெற்றது என்றால் வரவேற்கக் கூடிய விடயம் தான். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் தொடர்மாடிகளில் வசிப்பவர்கள் கூட பல கட்டுப்பாடுகளையும் மீறி பூங்கன்றுகளை பராமரிக்கிறார்கள். இவ்வாறான வித்தியாசமான நிகழ்வுகளை எதிர்பார்த்து வரவேற்கிறது ரசிகர்களின் உள்ளங்கள்.

“புதியதைத் தேடுங்கள் காலத்துக்கேற்றவாறு மாறுங்கள்” என்று அழுத்திக் கூறினார் சுவீடன் நாட்டு பிரபல ஊடகவியலாளர் கிளாஸ் தோ(class thor) அவருடன் சில நிமிடங்கள்.

CLASS THOR

CLASS THOR


கேள்வி:- எதற்காக ஊடகவியல் துறையைத் தெரிவு செய்தீர்கள்?
பதில் :- சின்ன வயதிலிருந்தே எனக்கு ஆர்வம் இருந்தது. எவ்வாறென்றால் பாடசாலைக்காலங்களில் பாடசாலை முடிந்தபின்பு நகர்ப்புறங்களை சுற்றிப்பார்ப்பேன். அங்கு என்ன நடக்கின்றது என்பதை அவதானிப்பேன். நாளுக்கு நாள் வேறுபட்ட
முகங்களைச் சந்திப்பேன். இதுவே எனக்கு அத்திவாரமாக அமைந்தது.

கேள்வி :- தற்போது இலங்கையில் ஊடகவியலின் நிலமை எவ்வாறு காணப்படுகின்றது?
பதில் :- என்னுடைய அவதானிப்பில் இருந்த இளம் ஊடகவியலாளர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களை மேலும் முன்னேற்றுவதற்காக நன்கு பயிற்சிகள் வழங்க வேண்டும். கூடுதலாக பெண்கள் இந்தத் துறையில் ஈடுபடுகின்றார்கள். சில முகங்களைப் பத்திரிகையில் காணக்கூடியதாக உள்ளது.

கேள்வி :-
இன்றைய காலகட்டத்தில் சுவீடனில் பத்திரிகைகளின் நிலை எவ்வாறு காணப்படுகின்றது?
பதில் :- பத்திரிகைகளுக்கு சரியான போட்டியாகவே காணப்படுகின்றது. ஏனென்றால் இணையம் நன்றாக வளர்ச்சி அடைந்து வாசகர்களை அதன் பக்கம் அதிகமாக ஈர்த்துக்கொண்டிருக்கின்றது.இருந்தாலும் இது வித்தியாசமான போட்டியாகவே காணப்படுகின்றது.

கேள்வி :- சுவீடனில் எத்தனை பத்திரிகைகள் வெளிவருகின்றன?
பதில் :- 150 வகையான பத்திரிகைகள். டெய்லி நியூஸ் பத்திரிகை மற்றும் நஷனல் பத்திரிகைகள் விற்பனையில் அதிக முன்னணியில் உள்ளது. டெய்லி நியூஸ் பத்திரிகை ஒரு நாளைக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகின்றன. மொத்தமாக 9 மில்லியன் மக்கள் சுவீடனில் வாழ்கின்றனர்.

கேள்வி :- உங்களுடைய நாட்டில் இவ்வாறான போட்டிகளுக்கு ஊடகவியலாளர்கள் எவ்வாறு முகம் கொடுக்கின்றார்கள்?
பதில் :- நாளுக்கு நாள் தங்களை மாற்றிக் கொண்டு புதிய எண்ணங்கள் சிந்தனைகளை முன்வைப்பதுடன் தினமும் அதிக மக்களுடன் பேசுகின்றார்கள்.

கேள்வி : – உங்களுடைய அனுபவத்தில் இலங்கை பத்திரிகைகள் எவ்வாறு காணப்படுகின்றது.
பதில் :- பத்திரிகைகள் மாற்றம் காணப்பட வேண்டும்.அதாவது பத்திரிகைகள் சாதரண மக்கள் வாழ்க்கையை அணுகவேண்டியுள்ளது.அதிகமாகவே ஆண்களினதும் அரசியல்வாதிகளினதும் படமும் செய்தியுமாகவே காணப்படுகிறது. வேறுபட்ட முறையில் நேர்முகம் காணல் செய்யப்பட வேண்டும். மக்கள் குரல்களையும் முகங்களையும் வெளிப்படுத்த வேண்டும். ஆலோசனை கூற வேண்டும்.

கேள்வி :- வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களுக்கு நீங்கள் கூறும் கருத்து என்ன?
பதில் :- முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்று பல்வேறு விதமான மக்களை சந்திக்க வேண்டும். வேறுபட்ட சூழலில் செயற்படுவதுடன் ஒவ்வொருநாளும் புதிய விடயங்களை கற்க வேண்டும். எது நல்லது கெட்டது என ஊடகவியலாளனுக்கு இல்லை. உண்மையறிய புலனாய்வு செய்ய வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்குமான மரபு ரீதியான போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனிதாபிமானப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தும் அங்கவீனமுற்றும் உள்ளனர். அத்துடன் உடமைகளையும் உறவுகளையும் இழந்து நிர்க்கதியாக நலன்புரி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்னர். இங்குள்ள மக்களை கைதிகள் போல் நடத்துவதாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான முதல் காரணமாவது சரியான முறையில் சிவில் நிர்வாகம் ஒழுங்கு படுத்தப்படவில்லை என்பதாகும். இதனால் பல பிரச்சினைகள் தலை தூக்க முற்படுகின்றன.
உணவுக்காக காத்திருப்போர்
போரினால் பாதிப்படைந்த மக்கள் அதிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளை நோய்கள் பரவி கடும் இன்னல்களை தோற்றுவிக்கின்றன. முகாம்களில் தொற்றுநோய்களான நெருப்புக்காய்ச்சல், அம்மைநோய், டெங்கு போன்றனவும் பரவுவதற்கான அபாயமும் காணப்படுகின்றன. ஐந்து பேர் தங்கக் கூடிய கூடாரங்களில் 30 பேர் தங்கவைக்கப்படுகின்றனர். இந்த இட நெருக்கடி தான் நோய்க்கான காரணி ஆகவும் அமைகிறது. இந்த மக்களுக்கு போதியளவு சுகாதார வசதியும் வழங்கப்படவில்லை. ஆத்துடன் சுத்தமான குடி நீர் பற்றாக்குறையும் பெரிய பிரச்சினை தான். சிறிய குழந்தைகள் முதல் கர்ப்பிணிப் பெண்கள் வரை கொழுத்தும் வெயிலில் குடிநீருக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சித்தும் சரியான முறையில் இதற்கான தீர்வு காணப்படவில்லை.
rt6

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் பல்வேறுபட்ட தரப்பினராலும் சேர்க்கப்பட்டு வந்தாலும் அவை உரிய முறையில் அம்மக்களை போய்ச்சேர்வதில்லை. இதற்கு காரணம் சுரண்டல்களும் நிர்வாக நடவடிக்கையில் காணப்படும் சிக்கல்களும் தான். சேர்க்கப்படும் பொருட்கள் இடைநடுவில் சில இடங்களில் இறக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச தொண்டு நிறுவனங்களும் தங்கள் பணிகளை சுதந்திரமான முறையில் முன்னெடுப்பதற்கு பல்வேறுவிதமான தடைகள் இருக்கின்றது. நிவாரண உணவுப் பொருட்கள் உரிய காலப்பகுதியில் வழங்கப்படுவதில்லை. முகாம்களில் 2 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் உள்ளனர். இவர்களில் காணப்பட்டவர்களும் அங்கவீனமுற்றவர்களும் அடங்குகிறார்கள். இவர்களுக்கான எந்த சிறப்பான வசதியும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் மனமுடைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

வயோதிபர்களும் சிறுவர்களும் உரிய பராமரிப்பு இன்றியும் போசாக்கான உணவு இன்றியும் வாடுகின்றனர் .இதுவரை 80 இற்கும் அதிகமான மரணங்கள் நலன்புரி முகாம்களில் சம்பவித்துள்ளன. அவர்களை அடக்கம் செய்வதில் கூட அரசு தற்போது சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது. பெற்றோரை இழந்த சிறுவர்களையும் முதியோர்களையும் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. பல்வேறு விசாரணைகளின் பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் மட்டும் உறவினர்களிடம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை சொந்தங்களை இழந்த பல சிறுவர்கள் முகாம்களில் உள்ளனர். தாய், தந்தை இருவரையுமே இழந்த 350 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் அங்கு உள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். இவர்களுக்கு அவர்களின் இழப்புக்களை பொறுத்து சிறு தொகைப்பணம் நிவாரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. இது கண்துடைப்பாகவே கருதப்படுகின்றது. இப்பணம் அவர்கள் இழந்த வாழ்வை மீட்டெடுக்கப்போவதில்லை. அவர்களுக்கு தேவையான கல்வி தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கவனமெடுத்த போதும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. புல சிறுவர்கள் போர் அதிர்ச்சியால் உளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கான சீர்படுத்தும் உளவள நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
f4566
இடைத்தங்கள் முகாம்களில் வதியும் மக்களின் துயரங்களை சனல்-4 மற்றும் ஸ்கைய் நியூஸ் செய்தி நிறுவனங்கள் வெளிக்கொண்டுவந்தன. இதில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான துஷ்பிரயோகம் தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தது. குறிப்பாக துணை ஆயுதக்குழுக்களால் சிறுவர்கள் கடத்தப்பட்டு ஆயுதப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தன. இதேவேளை இவை உண்மைக்கு புறம்பானவை என மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அகதி முகாம்களில் பணியாற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் யுனிசெவ் உம் எந்தவொரு முறைப்பாட்டையும் தமக்கு வழங்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்

முகாம்களில் உள்ள மக்களின் நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் திறந்த சிறைக்கைதிகளாகவே வாழ்கின்றனர். இவர்களை சென்று பார்ப்பதற்கு கூட உறவினர்களால் முடியாததாக உள்ளது. பணத்தைத் தவிர எந்தவொரு பொருட்களும் அவர்களுக்காக எடுத்துச் சென்று கொடுக்கமுடியாது. இதேவேளை நலன்புரி முகாமிலுள்ள பத்து வயதை அடைந்த சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டமொன்றை அரசு ஆரம்பித்துள்ளது. அதன் பின்னரே இவர்கள் சுதந்திரமான முறையில் நடமாட முடியும் என சிவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இருந்தாலுமம் இப்பணி முன்னகர்வதற்கான எந்தவித அறிகுறியும் காணப்படவில்லை. ஆனால் இந்த திட்டம் கவலை அளிப்பதாக ஆனந்த சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் எல்லோரும் தொடர்ந்தும் பிழை செய்ய மாட்டார்கள். பெற்றோர்களுக்கு இத்திட்டம் அதிருப்தியாக இருக்கும் தமிழ் சிறுவர்கள் பின்தள்ளப்படுவார்கள் அவர்கள் மற்றவர்களிடம் கையேந்துவது போலாகும் என்றும் இந்த வயதெல்லையை பதினாறாக மாற்றுமாறும் கோரியிருந்தார்.

எல்லாவற்றையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு தப்பி வந்த மக்களுக்கு அந்த உயிர் கூட இல்லாது போகுமானால் பிறகு எதற்கு போலியான மனிதாபிமானப் பணிகளும் மீள்குடியமர்த்தும் செயற்பாடுகளும். குறித்தவொரு வன்னியர் பரம்பரைNயு அழிவை எதிர்நோக்கியுள்ள வேளையில் இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடின் அவர்களின் எதிர்கால சந்ததி என்பது கேள்விக்குறிதான்….

Followers

About this blog

Labels