கடந்த பத்தாண்டுகளாக ஆண்டுக்கு 400 தொன் முதல் 500 தொன் தங்கம் விற்பனை செய்து வந்த ஐரோப்பிய மத்திய வங்கி இந்த ஆண்டு விற்பனை செய்யவுள்ள தங்கத்தின் அளவைக் குறைத்துள்ளது. இதனால் இந்த ஆண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு சர்வதேச நிதி அமைப்பிடம் இருந்து சீனா 450 தொன் தங்கமும், இந்தியா 200 தொன் தங்கமும், ரஷ்யா 120 தொன் தங்கமும், விலைக்கு வாங்கின. அமெரிக்க அரசு 8133 தொன் தங்கமும், யூரோ சோன் 10 800 தொன் தங்கமும், சர்வதேச நிதி அமைப்பு 3000 தொன் தங்கமும் இருப்பு வைத்துள்ளன. உலகளவில் உள்ள பல்வேறு நாட்டு அரசுகளும் இருப்பு வைத்துள்ள மொத்த தங்கத்தின் அளவு 30 ஆயிரம் தொன்னை எட்டியுள்ளது.

இந்த ஆண்டு தங்கம் தான் அதிக தகுதி வாய்ந்த சொத்தாக கருதப்படும் நிலை உருவாகியுள்ளது. பொருளாதார மறுசீரமைப்புக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளது. முதலீட்டிற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கி அதிகளவு தங்கம் இருப்பு வைத்திருக்கும் நிலையில் பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் மிக குறைந்த அளவு தங்கமே உள்ளன. ஆசிய நாடுகளிடம் மொத்தம் 2சதவீதம் தங்கமே இருப்பு உள்ளது.ஆசிய மத்திய வங்கி தன்னிடம் இருக்கும் தங்கத்தின் இருப்பை இன்னும் ஒரு சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டுமானால் 1000 தொன் தங்கம் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இப்ப புரிகின்றதா தங்கத்தின் மதிப்பு. உங்களை யாராவது தங்கமான பிள்ளை என்றால் சந்தோஷப்படுங்கள் இன்றிலிருந்தாவது……

நீங்கள் எத்தனை தரம் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும்போது இந்தமாதிரியான தலைப்புகளின் கீழ் கட்டுரை எழுதி இருப்பீர்கள்? சூரியன் உதிப்பதையும், பறவைகள் கீச்சிடுவதையும், கோயில் மணி கேட்கிறது, என்பதையும் கேட்டமோ பார்த்தமோ தெரியாது. ஆனால் தலைப்பு சொன்னவுடன் இந்த வரிகளை போட்டு விடுவோம். அப்போது எதை சொன்னாலும் நம்பிக் கொள்ளும் பருவம். எதிலும் உடனே மனம் தாவிக்கொள்ளும் மனநிலை இருந்தது. அந்தப் பருவத்தை அனுபவித்துத் தான் எல்லோரும் வந்திருப்போம்.
ஆசிரியர் சொன்னவுடன் எழுதவேண்டும் என்று முந்தியடிப்போம். “ரீச்சர்….ரீச்சர் …” என்று கத்தியே ஆசிரியரைக் கொன்று விடுவோம். காலைக்காட்சி என்றவுடன் கடலிலோ அல்லது மலைமுகட்டிலோ சூரியன் தோன்றுவதைத் தான் யோசிப்போம். காலைக் காட்சியைக் கீறச்சொன்னால் கூட அதைத் தான் செய்வோம். அடுத்த கட்ட நகர்வாக பறவைகள் கத்துவதைத் தான் நினைப்போம். கிளி கத்துமா முதல்ல, காகம் கத்துமா என இரண்டு பக்க மூளையாலும் யோசிப்பம். அதையும் எழுதினாப் பிறகு ஒருக்கா பக்கத்தில உள்ளவையின்ர கொப்பியை எட்டிப் பார்ப்பம். ஏனெண்டால் அவன் என்ன விட கூட எழுதீட்டானோ என்று பார்க்க……. ‘கோயில் மணி கேட்டது…. அக்கா பூக்கூடையுடன் கோயில் போகிறாள்….. பள்ளிக்கு மாணவர்கள் செல்கிறார்கள்….’ என்றெல்லாம் ஏதோ எழுதி முடிச்சிடுவம். அதுக்குப் பிறகு என்ன…? “ரீச்சர் …….ரீச்சர்… என்ட கொப்பியைப் பாருங்கோ…” என்று எழும்பி கத்துறது தான்…
ஆனால் இண்டைக்கும் அப்படியா என்றால் என்ன சொல்வது…? அவன் திறந்திருக்கும் எல்லா ரியூசனுக்கும் போட்டு கடைசியா ஓகன் கிளாசுக்கும் போட்டு வந்து படுக்க எட்டு ஒன்பது மணியாகிடும். விடிய வான் காரனுக்காகவாது எழும்ப வேண்டும். ஏழரை பள்ளிக் கூடத்துக்கு ஆறு மணிக்கே வந்திடுவான். அதில ஏறினால் பிள்ள எங்க சூரியனப் பார்க்கிறது சிக்னல் லைட்டையும் traffic யையும் தான் பார்க்கலாம். காகத்தை எங்க பார்க்கிறது……பிறகு எப்படி கோவில் மணி….?

ரீச்சர் காலைக் காட்சி எழுதச் சொன்னால் அவனின் கட்டுரை எப்படித் தொடங்கும். நீங்கள் சிந்தியுங்கள்…………… முடியுமாக இருந்தால் உங்கள் பிள்ளையின் கொப்பியைப் பாருங்கோ……

வழமையான தேர்தல்களை விட இம்முறை சற்று வித்தியாசம். தமிழ்க்கூட்டமைப்பின் நேரடி ஆதரவுடன் தமிழர்கள் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் தரப்பாகவுள்ளனர். எனவே இருபெரும் வேட்பாளர்களின் வாக்குத் திரட்டும் நடவடிக்கைகளும் தமிழர் பிரதேசங்கள் நோக்கி நகர்ந்திருக்கின்றது. தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கையுடன் ஆங்காங்கே சூட்டுச்சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதுவரை மூவர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். 26ம் திகதி வாக்களிக்க முடியுமா என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் பார்வையாளர்களா? பங்காளிகளா?


கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இது வரை மூன்று பாரிய அளவிலான வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பிரதேச சபை முன்னாள் தலைவரின் கடை 18.01.2010 நள்ளிரவு எரிக்கப்பட்டது, பிரச்சாரம் சென்று விட்டு வீடு திரும்பியோர் மீது துப்பாக்கிச் சூடு)

இதைவிட எத்தனையோ குழறுபடிகள் நடந்துள்ளது, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் கண்காணிப்பு அவதானிப்பாளரிடம் இருந்து பெற்றவை சில……

• சில இடங்களில் பதிவு செய்யப்படாத கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரம் போஸ்டர்கள் கட்அவுட்களை அகற்றுமாறு கோரியும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

• கட்சிக் கூட்டங்கள்;; இடம் பெறும் போது தாக்குதல்கள் இடம் பெறுவதுண்டு. நேற்று அட்டாளைச்சேனையில் 500 மீற்றருக்குள் இரண்டு கட்சிகளின் கூட்டம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பொலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே பிரச்சாரங்கள் இடம் பெறுகின்றன. மக்களுடைய ஆர்வத்தைக் கண்டு கொள்ள முடியவில்லை.

• நாடு முழுவதும் இன்றுவரை 501 முறைபாடுகள் பதிவாகியுள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நீதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துமாறு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நீதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துமாறு ஆயர் மன்றமும் கோரிக்கை விடுத்துள்ளது.

• நேற்று(20.01.2010) முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தேர்தல் முறைப்பாடு பதிவாகியுள்ளது. தேர்தல் கூட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

• தேர்தலை இடையூறு இல்லாமல் நடாத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என பஃவ்ரல் (PAFFRAL)அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

• இது வரை 124 வாகனங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது இடம் பெற்ற தாக்குதலில் சேதமாக்கப்பட்டுள்ளது. 83பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 4 நாட்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றன. அட்டகாசமா? அடக்கமா? பொறுத்திருப்போம்.


அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வருட ஆரம்பத்தில் வரும் தமிழர் பண்டிகை என்பதால் எல்லோருக்கும் குதூகலம் அதிகம். தைமாதத்தின் பிறப்பை அறுவடைத்தினமாக, பொங்கல் தினமாக உலக தமிழினம் கொண்டாடி வருகின்றது. முன்புபோல எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வீட்டினுள்ளே பொங்கல் இம்முறை இடம்பெறுகின்றது. என்ன செய்வது! பொங்கல் தினத்தில் இன்பம் பொங்கிப்பெருகி வருவதென்று கூறுவார்கள். நமக்கு விவசாயத்திற்கு காலமெல்லாம் நன்மை பயக்கும் மழை, சூரியன், கால்நடை ஆகியவற்றுக்கு நன்றி கூறும் ஒரு நன்நாளாக இது அமைகின்றது. இந்தியாவின் பொங்கல் நடைமுறைகள் எங்களுக்கு ஒத்தவராது போலுள்ளது. பொங்கலுக்கு முதல் நாள் போகி என்று பழைய சாமான் எல்லாத்தையும் போட்டுக் கொழுத்துவார்கள். பொங்கல் அன்று பொங்கிச் சூரியனுக்குப் படைப்பார்கள். அடுத்தநாள் மாட்டுப்பொங்கல் என்று, விவசாயிகளின் நண்பன் உழைக்கும் மாட்டுக்கு அலங்காரம் செய்து பொங்கிப்படைப்பார்கள். மறுநாள் காணும் பொங்கல், உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று சந்தோஷங்களைப் பரிமாரிக் கொள்வார்கள்.

கடந்த வருட கசப்புக்களை மறந்து இவ்வருடத்தில் புதிதாக மாறுவோம். ஆதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வித்திடட்டும்.

உலகைப் பயமுறுத்திய சர்வாதிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. 1922முதல் 21ஆண்டு காலம் இத்தாலியின் பயங்கரமான சர்வாதிகாரியாக விளங்கிய இவர் ஹிட்லரின் நண்பர். ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்னர் முசோலினி புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நடந்த முறை சாதாரணமானதல்ல. சிம்ம சொப்பனமாக இருந்த சர்வாதிகாரியையும் அவருடைய காதலியையும் சுட்டுக் கொன்று அவர்களது உடல்களை கம்பங்களில் தலை கீழாகத் தொங்கவிட்டனர். இத்தாலியில்இஇரும்புப் பட்டறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883 ம் ஆண்டு ஐ_லை 29ம் திகதி முசோலினி பிறந்தார். தாயார் ஆசிரியர். அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்து வந்தது. முசோலினியின் தந்தை “மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி மலர வேண்டும்”என்ற கருத்துடையவர். தன் இரும்புப் பட்டறைக்கு வருபவர்களிடம் அரசியல் பேசுவார். அதனால் முசோலினிக்கும் இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது.பள்ளிப் படிப்பை முடித்ததும் சில காலம் ஆசிரியராகப் பணி புரிந்தார். லத்தீன்இ பிரெஞ்ச்இ Nஐர்மன்இ ஸ்பானி;ஷ்இ ஆங்கிலம் முதலிய மொழிகளையும் கற்றார். பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கவர்.



ஆசிரியர் தொழிலை விட்டு பின்னர் இராணுவத்தில் பணியாற்றினார். பிறகு கம்ய+னிஸ்ட் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரானார். பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கின. ஒரு கட்டுரைக்காக அவருக்கு ஓராண்டு சிறைத்; தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலையான மறுநாளே “அவந்தி” என்ற புரட்சிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
உலகப் போர்
இந்த நிலையில் 1914ம் ஆண்டு முதலாம் உலகப் போர் மூண்டது. முசோலினி இராணுவத்தில் சேர்ந்தார். இதே ஆண்டில் தான் Nஐர்மனியில் ஹிட்லரும் இராணுவத்தில் சேர்ந்தார். போரில் படுகாயமடைந்த முசோலினி ஊருக்குத் திரும்பினார். 1919ல் உலகப் போர் முடிந்தது.போரில் இத்தாலியில் மட்டும் 6லட்சத்து 50ஆயிரம் பேர் இறந்தார்கள். மேலும் 10லட்சம் பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்து எங்கும் பசியும் பட்டினியுமாகவே காணப்பட்டது. நாட்டில் கலகங்கள் மூண்டன. இந்த சூழ்நிலையில் 1920ல் “பாசிஸ்ட்” கட்சியை முசோலினி தொடங்கினார். 1921ல் நடந்த தேர்தலில் முசோலினி கட்சி ஆட்சியைப் பிடிக்கமுடியாவிட்டாலும் 30 இடங்களைக் கைப்பற்றியது. முசோலினி அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஏதிர்க்கட்சித் தலைவரான முசோலினி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீரவேகச் சொற்பொழிவுகள் ஆளும் கட்சியினருக்கு அச்சமூட்டின. பாராளுமன்றத்தை அமைதியாக நடத்த விடமால் கலாட்டா செய்து கொண்டிருந்தார். 1922 ஒக்டோபரில் முசோலியின் கருஞ்சட்டைப்படை இத்தாலியின் தலை நகரத்தைப் பிடிக்கத் திரண்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் அமைச்சரவையை ராஐpனாமா செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டார். மந்திரிசபை விலகியதும் ஆட்சிப் பொறுப்பை முசோலியிடம் ஒப்படைத்தார்.


ஆட்சிக்கு வந்த முசோலினி “இத்தாலியின் முன்னேற்றத்திற்காக நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். இதை எதிர்ப்பவர்களை அடியோடு அழித்து விடுவேன்” என்று அறிவித்தார். எதிர்க்கட்சிகளை தடை செய்தார்.பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கினார் .தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார். அது மட்டுமல்லாமல் தன் எதிரிகளைச் சிரச் சேதம் செய்யும் படி உத்தரவிட்டார்.மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு மேல்! இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி மக்களைக் கவர்வதற்கு பல திட்டங்களை முன்வைத்தார். விவசாயிகளுக்கு இயந்திரக் கலப்பைகள் வழங்கினார். அதனால் உணவு உற்பத்தி பெருகியது.வேலை இல்லாத்திண்டாட்டத்தை ஒழித்தார். வரிகளைக் குறைத்தார். மருத்துவ வசதிகளைப் பெருக்கினார். இதனால் முசோலியை மக்கள் ஆதரித்தனர். நிலைமை தனக்கு சாதகமாக இருந்ததால் பொதுத் தேர்தலை நடத்தினார். அதில் அவர் கட்சி அமோக வெற்றியீட்டியது. அதன் பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை எடுத்துக் கொண்டார். 1922ம் ஆண்டு முதல் இத்தாலியின் மாபெரும் சர்வாதிகாரியாக முசோலினி விளங்கினார். 1933ல் Nஐர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லர் முசோலினியின் நண்பர். 1934ல் வெனீஸ் நகருக்குச் சென்று முசோலியைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து இத்தாலி இராணுவத்தைப் பலப்படுத்தவும் ஆயுதத் தொழிற்சாலை அமைக்கவும் ஹிட்லர் உதவினார்.


இந்த நிலையில் அரசாங்க விருந்து ஒன்றில் கிளாரா என்ற அழகியை முசோலினி சந்தித்தார். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்தார். ஏற்கனவே திருமணம் ஆன முசோலினி கிளாராவை எப்படியும் அடைந்தே தீருவது என்று தீர்மானித்தார். கிளாரா விமானப்படை அதிகாரி ஒருவரை மணந்து விவாகரத்துப் பெற்றவள். தனது வசீகரப் பேச்சால் கிளாராவைக் கவர்ந்த முசோலினி அவளைத் தன் ஆசைநாயகி ஆக்கிக் கொண்டார். பொதுவாகப் பெண்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்ளும் முசோலினி கிளாராவிடம் மட்டும் அன்போடு பழகினார். உண்மையாகவே அவளை நேசித்தார்.
இரண்டாம் உலகப்போர்
1939ல் இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஹிட்லரும் முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். முதலில் இவர்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்தது.பிறகு போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும் முசோலினிக்கும் தோல்வி ஏற்பட்டது. இத்தாலி மக்களிடம் செல்வாக்கை முசோலினி இழந்தார். அவரை “பாசிஸ்ட்” கட்சி மேலிடம் பதவி நீக்கம் செய்து வீட்டுக்காவலில் வைத்தது. முசோலினியைக் காப்பாற்ற விரும்பிய ஹிட்லர் தனது உளவுப்படையை அனுப்பினார். உளவுப்படையினர் முசோலினியை மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.தன் மனைவியுடனும் கிளாராவுடனும் ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார்.


அப்போது “இத்தாலி விடுதலை இயக்கம்” என்ற புரட்சிகர இயக்கம் தோன்றியது. இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்ட முசோலினி தன் மனைவியுடனும் காதலியுடனும் அண்டை நாடான சுவிட்சலாந்துக்கு தப்பி ஓட முடிவு செய்தார். இரண்டு இராணுவ லொறிகளில் தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் வழியிலேயே லொறிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியைக் கைது செய்தனர். இதைக்கண்ட முசோலினியின் காதலி கிளாரா லொறியில் இருந்து குதித்தார். அவளையும் பிடித்தார்கள். முசோலினியின் மனைவி லொறிக்குள் பதுங்கிக் கொண்டதால் அவள் மட்டும் தப்பித்துக் கொண்டாள்.


இது நடந்தது 1945ம் ஆண்டு ஏப்ரல் 27ம் திகதி. அன்று டோங்கோ நகரில் ஒரு அறையில் முசோலினியும் கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர். மறு நாள் மலைப்பகுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றனர். அங்கு நடு றோட்டில் நிற்க வைத்து சரமாரியாகச் சுட்டார்கள். முசோலினியும் கிளாராவும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இவர்களின் உடல்களை புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்குக் கொண்டு சென்றனர். அங்கு விளக்குக் கம்பத்தில் தலை கீழாகத் தொங்கவிட்டனர். அன்று மாலை உடல்கள் அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டு சென்று புதைக்கப்பட்டது. புதைப்பதற்கு முன்னர் குற்றவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து முசோலினியின் மண்டை ஓட்டைப் பிளந்து அவருடைய மூளையை எடுத்துச் சென்று விட்டனர். ஆராய்ச்சி செய்வதற்காகவோ!


கடந்த வாரத்தில் எல்லா ஊடகங்களிலும் இதைப்பற்றித் தான் கதை “பிரின்சஸ் கிரிசான்ரா”. வியப்புடன் சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளது. இந்தக் கப்பல் மக்கள் பார்வைக்காக காலிமுகத்திடலில் தரிக்கப்படும் என செய்தி கிடைத்ததும் தாமதம் நான் பார்ப்பதற்கு வெளிக்கிட்டேன். 11.30 போல காலி முகத்திடலில் நின்றேன். ஒரே சனக்கூட்டமாக இருந்தது. எல்லோருடைய கண்களும் கடலுக்குள் தான் சென்றது. எனக்கு உடனே விளங்கி விட்டது. காத்துக்கொண்டு நின்றேன். எல்லோரும் பரபரத்தார்கள். மெதுவாக ‘பிரின்சஸ் கிரிசான்ரா’ நகர்ந்து வந்து கொண்டிருந்தது. ஒரு கணம் திகைச்சுப் போனேன். எத்தனையோ கமராக்கள் படம் பிடித்தன. கிரிசான்ராவுக்கு முன் ஆறேழு டோறாப் படகுகள் வட்டம் போட்டுக் கொண்டும் சாகசங்களைக் காட்டிக் கொண்டிடும் இருந்தன. தரையில் இருந்து பார்க்கக் கூடிய மாதிரி கப்பல் தரிக்கப்பட்டது. (கடலிலும் தரையிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது).

அக்கப்பலினுள் கார் தரிக்கக் கூடிய அளவு இடமுள்ளதாகவும் சுரங்கம் போல உள் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு கூடி நின்றவர்கள் கதைத்துக் கொண்டார்கள். சகோதர மொழி தெலைக்காட்சிகளில் அவ் உள் கட்டமைப்பு காட்டப்பட்டதாம். இனி இந்தக் கப்பலை காலிக்கு கொண்டு சென்று ரிக்கட் மூலம் மக்களின் பார்வைக்காக விடப்படப் போகுதாம். என்றும் பேச்சு அடிபட்டது.

“பிரின்சஸ் கிரிசான்ரா” ஆசிய நாடொன்றின் கடற்பரப்பில் வைத்தே மூன்று வாரங்களுக்கு முதல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பின்னரே கொழும்புக்கு கொண்டு வரப்பட்டது. இந்தக் கப்பலில் ஹெலியை தரையிறக்க முடியும். 90 மீற்றர் நீளமும் 16 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலினுள் 5000மெற்றிக் தொன் எடையுள்ள பொருட்களை ஏற்ற முடியுமாம். (நான் ஒன்றும் அளந்து பாக்கல சம்பந்தப்பட்டவர்கள் சொன்னதைத்தான் சொல்றன்)



இவ்வளவு தான். நீங்கள் பார்தனீங்களோ! BMICH ல கொண்டுவந்து வைப்பினமோ?

இந்த நூற்றாண்டில் ஒரு பெண்ணின் மரணம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்ததென்றால் அது டயானாவின் மறைவு தான். இங்கிலாந்து இளவரசர் சார்ல்சைக் காதல் திருமணம் செய்த அழகு தேவதை.விதியின் விளையாட்டால் விவாரத்துப் பெற்றவர்.கோடீஸ்வரர் ஒருவரை மணக்க இருந்த போது கார் விபத்தில் பலியானார்.



டயானா இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு தூரத்து உறவினர்.அந்த முறையில் அவர் அடிக்கடி அரண்மனைக்கு வந்து போவதுண்டு.அவரிடம் பட்டத்து இளவரசரான சால்ஸ் காதல் கொண்டார்.ஒரு நாள் தன் காதலை வெளிப்படுத்தினார்.அவரை மணக்க டயானாவும் சம்மதித்தார். 1981 ஐPலை 29ம் திகதி டயானா சார்ல்ஸ் திருமணம் சிறப்பாக நடந்தது. சில ஆண்டுகளின் பின்னர்இ வில்லியம்இஹாரி ஆகிய இரு ஆண்குழந்தைகளுக்கு தாயானார். ஒரு நாள் பத்திரிகைகளில் வெளியான செய்தி டயானாவை திடுக்கிடச் செய்தது.சார்ஸ்சுக்கு திருமணம் நடப்பதற்கு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே கமீலா என்ற பெண்ணுடன் தொடர்பு உண்டென்றும் திருமணத்திற்குப் பிறகும் அவர்களுடைய காதல் நீடிக்கிறது என்றும் பத்திரிகைகள் கூறின.


டயானா-சாள்ஸ் வாழ்கையில் புயல் வீசத் தொடங்கியது.கமீலாவுடன் தனக்கு காதல் உண்டென்பதை சாள்ஸ் ஒப்புக் கொண்டாலும் அந்தக் காதலை முறித்துக் கொள்ள முன் வரவில்லை. டயானா போன்ற அழகியல்ல கமீலா.ஆனாலும் ஆண்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி அவளிடம் இருந்தது.இத்தனைக்கும் அவள் கன்னிப் பெண் அல்ல.ராணியின் உறவினரான பார்க்கர் பவுல்ஸ் என்பவரின் மனைவி. சாள்ஸ{ம் கமீலாவும் டெலிபோனில் காதல் ரசம் சொட்டப் பேசிக் கொண்டதைப் பத்திரிகைகள் ரகசியமாக “ரக்கோட்” செய்து வெளியிட்டன.இனி சாள்ஸ் உடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தார்.


1992 டிசம்பர் 9ம் திகதி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். “வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் பிரிந்து வாழ்வதென்று முடிவு செய்திருக்கிறார்கள்.பக்கிங்ஹாம் அரண்மனை இந்தச் செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. இளவரசரும் இளவரசியும் விவாகரத்து செய்து கொள்வதாக இல்லை.ஆகவே அவர்களுடைய சட்டப+ர்வமான அந்தஸ்து அப்படியே இருக்கும்.குழந்தைகளை வளர்ப்பதில் இருவரும் மனப்ப+ர்வமாகச் சேர்ந்து ஈடுபடுவார்கள்.பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கு கொள்வார்கள்.” இந்த அறிவிப்புக்குப் பின் இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். சில ஆண்டுகளின் பின்னர் டயானா குறிப்பிட்ட சில ஆண்களிடம் பழகுவது பற்றி பத்திரிகைகள் ‘கிசு கிசு’ வெளியிட்டன.


1996 ஆகஸ்ட் 25ம் திகதி டயானாவும் சாள்ஸ{ம் அதிகாரப் ப+ர்வமான விவாகரத்துப் பெற்றனர். டோடி என்ற 41 வயது எகிப்திய கோடீஸ்வரருக்கும் டயானாவுக்கும் காதல் ஏற்பட்டது.இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தனர். 1996 ஆகஸ்ட் 31ம் திகதி பிரான்ஸ் தலை நகரான பாரீஸ் நகரில் உள்ள ஹோட்டலில் டயானாவும் டோடியும் தங்கியிருந்தனர்.ஹோட்டலின் ஒரு நாள் கட்டணம் மூன்று லட்சம் ரூபாய்.இருவரும் காரில் செல்லும் போது படம் எடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக டயானாவும் டோடியும் மின்னல் வேகத்தில் பறந்தனர்.பத்திரிகையாளர்களும் விடாது துரத்தினர். புகழ் பெற்ற ஈபிள் டவருக்கு அருகே ஒரு சுரங்கப் பாதையில் டயானாவின் கார் வேகமாக நுழைந்தது.எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதையின் கொன்கிறீட் தூண் மீது கார் மோதி நொறுங்கியது.


டயானா படுகாயமடைந்து நினைவு இழந்தார்.டோடியும் கார் ரைவரும் அதே இடத்தில் இறந்து போனார்கள். காரின் சிதைந்த பாகங்களை வெட்டித் தான் டயானாவை வெளியே எடுக்கமுடிந்தது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது டயானா உயிருடன் இருந்தார்.இவரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் பாடுபட்டனர்.ஆனாலும் எல்லாவற்றையும் மீறிக் கொண்டு டயானாவின் இறுதி மூச்சு நின்று விட்டது. டயானா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினம் தினம் குவியும் ப+ங்கொத்துக்களும் மலர் வளையங்களும் உலக மக்களின் மனதில் டயானா எத்தகைய இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்த்துகின்றது. ;

Followers

About this blog

Labels